[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 04:42.26 PM GMT ]
கல்கிசைப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சுட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போதைப் பொருள் தேடுதல் நடவடிக்கைகளுக்காகச் சென்ற பொலிஸார் மீது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர்கள் மீது பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதனால் அந்த பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் பின்னர் குறித்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மாகாணத்தில் எங்களை நாங்களே ஆள சுயதொழில் வாய்ப்புகள் அவசியம்: கோவிந்தன் கருணாகரம்
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 05:14.24 PM GMT ]
ஒவ்வொருவரும் எங்கள் குடும்பங்களை அபிவிருத்தி செய்யப் பழகிக் கொண்டோமானால் எதிர்காலத்தில் எங்கள் பிரதேசத்தை மாவட்டத்தை, மாகாணத்தை நாங்களே ஆளக்கூடிய சகல உரிமைகளையும் பெற்று வாழக்கூடிய நிலையை உருவாக்கலாம் என அவர் தெரிவித்துள்ளளார்.
ஏறாவூரில் இடம்பெற்ற சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏறாவூர் ஐந்தாம் வட்டாரத்தில் உள்ள மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக மாகாணசபை உறுப்பினரின் நிதியொதுக்கீட்டில்
உதவித்தொகை வழங்கப்பட்டது.
உதவித்தொகை வழங்கப்பட்டது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த நாட்டின் அரசாங்கம் வடக்கு, கிழக்கை மாற்றான்தாய் பிள்ளைகளைப் போல் தான் பார்க்கின்றார்கள். முஸ்லிம் பிரதேசங்கள் துரிதகதியில் அபிவிருத்தியடைகின்றது. இந்நாட்டில் ஏனைய இனங்கள் வாழும் பிரதேசங்கள் பாரிய அபிவிருத்தியடைந்து வருகின்றன. எங்கள் பகுதிகளில் உருவாகும் விளைச்சலைக் கொண்டு ஏனைய பிரதேசங்கள் தான் அபிவிருத்தி கண்டுவருகின்றன.
நாங்கள் எதிர் காலத்தில் சுயநிர்ணய உரிமையுடன் எங்களை நாங்களே ஆளக்கூடிய ஆட்சியை வடக்கு, கிழக்கில் அமைப்பதற்கு சுயதொழில் வாய்ப்புகள் மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் எங்கள் குடும்பங்களை அபிவிருத்தி செய்யப் பழகிக்கொண்டோமானால் எதிர்காலத்தில் எங்கள் பிரதேசத்தை மாவட்டத்தை மாகாணத்தை நாங்களே ஆளக்கூடிய சகல உரிமைகளையும் பெற்று வாழக்கூடிய நிலையை உருவாக்கலாம்.
கடந்த முப்பது வருட கால ஆயுதப்போராட்டத்தாலும் அதற்கு முன்னரான முப்பது வருட கால அகிம்சைப் போராட்டத்ததாலும் தமிழ் மக்களாகிய நாங்கள் பெரும் இழப்புகளை சந்தித்திருக்கின்றோம். அரசியல் தலைவர்கள், போராளிகள், பொதுமக்கள், சொத்துகள், கல்வி போன்ற அனைத்தையும் இழந்திருக்கின்றோம். இந்த நாட்டில் நாங்கள் அனாதைகளாக அகதிகளாக வாழும் நிலை தான் உருவாகியிருக்கின்றது.
1987ல் இந்தியா எங்களுக்கு உதவி செய்வதாகக்கூறி 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மாகாணசபைகள் உருவாக்கப்பட்டது. வடக்கு, கிழக்கை இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு அந்த சபை அரசியல் ரீதியாக ஒருசில மாதங்களே செயற்பட்ட நிலையில் கலைக்கப்பட்டது.
ஏனைய மாகாணங்கள் தற்போதும் தங்கள் அதிகாரங்களை பயன்படுத்தி ஆட்சி நடத்தி வருகின்றன. தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் இன்று மற்றவர்கள் மட்டும் அனுபவிக்கக்கூடியதாக இருக்கின்றது. 2007ல் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் மாகாணசபை உருவாக்கப்பட்டு அந்த
மாகாண ஆட்சி முற்றுப்பெறாத நிலையில் ஒருவருடத்திற்கு முன்பே கலைக்கப்பட்டு இரண்டாவது தடவையாக கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது.
மாகாண ஆட்சி முற்றுப்பெறாத நிலையில் ஒருவருடத்திற்கு முன்பே கலைக்கப்பட்டு இரண்டாவது தடவையாக கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது.
இருபத்தாறு வருடங்களாக நடத்தப்படாதிருந்த வடமாகாண சபைத் தேர்தலை வெளிநாட்டு சக்திகளின் அழுத்தம் காரணமாக தற்போது நடத்த அரசு உத்தேசித்திருக்கின்றது. வடமாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தமிழ் மக்கள் அதிகாரத்தை பிடித்துவிடுவார்கள் அதன் மூலம் காணி பொலிஸ் அதிகாரங்கள் உட்பட மாகாண சபை அதிகாரங்களை பயன்படுத்த முயற்சிப்பார்கள் என்பதற்காகவே பேரினவாத சக்திகள் 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென கூக்குரலிடுகின்றன.
எமது அயல்நாடான இந்தியா அழுத்தங்களை கொடுத்ததன் விளைவாக 13ஆவது திருத்தச் சட்டத்தில் எந்தவித மாற்றங்களுமின்றி வடக்கு மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் விரும்பினால் இணைந்து செயற்படலாம் என்ற ஒரு சரத்து இருக்கின்றது. அதை நீக்குவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கின்றது.
கிழக்கு மாகாணம் இன்று ஒரு தனிமாகாணமாக திருகோணமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்துகின்றது.
கிழக்கு மாகாணத்தில் அறுபது வருடங்களுக்கு முன்பு அறுபத்தைந்து வீதமான தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று மூன்றில் ஒரு வீதம் தமிழ் மக்களும் மூன்றில் ஒரு வீதம் சிங்கள மக்களும் மூன்றில் ஒரு வீதம் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றார்கள். இன்னும் சில வருடங்களில் முஸ்லிம் மக்களின் சதவீதம் ஐம்பதை தாண்டும். தமிழ் மக்களின் சதவீதம் இருபதிற்கு வீழ்ச்சியடையும்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காடையர் குழுக்களாலும் பாதிக்கப்பட்டார்கள். வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பது அவசியமற்றதென சிலர் கூறலாம்.
ஆனால் போராட்ட காலத்தில் வடக்கு மக்களுக்கு கிழக்கு மக்களின் உதவி தேவைப்பட்டது. கிழக்கு மக்கள் தான் கூடுதலானளவு போராடினார்கள். வடக்கும் கிழக்கும் இணைந்திருந்தால் தான் தமிழ் மக்கள் சகல உரிமைகளையும் பெற்று அடிமைத்தனமின்றி ஒரு தமிழ் முதலமைச்சரின் கீழ் வாழமுடியும். கிழக்கு மாகாண தமிழர்களின் வீதத்தை பார்க்கின்றபோது எதிர்காலத்தில் தமிழ் முதலமைச்சர் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருந்து சகல உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும்.
Geen opmerkingen:
Een reactie posten