[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 10:26.29 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் வைத்து கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
கண்டி - தந்துரே பிரதேசத்தில் திருமணமாகி இரண்டே நாளில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கட்சி தலைமையகமான சிறிகொத்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கும் ஹெட்பார்க் கூட்டத்திற்குச் சென்ற உள்ளூராட்சி தலைவர்களுக்குமே பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் எதிர்காலத்திலும் கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதாக பொது மன்னிப்புப் பெற்ற உள்ளூராட்சி உறுப்பினர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்தை நாடுவேன்: மனுஷ நாணயக்கார
அரசுடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பனர்களுக்கு எதிராக அந்த கட்சி எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில், மீண்டும் நீதிமன்றத்தின் உதவியை நாட உள்ளதாக அந்த கட்சியில் இருந்து அரசு பக்கம் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த பிரச்சினை தொடர்பில் நான் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசுடன் இணைந்து கொண்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கையை எடுக்க உள்ளோம்.
மனசாட்சிக்கு அமைய தீர்மானங்களை எடுக்கும் சுதந்திரத்திற்கு அமைய எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
கிணற்றில் குதித்து தற்கொலை செய்த மணப்பெண்- மனைவியின் நண்பியை வல்லுறவுக்கு உட்படுத்தி பணம் பறித்த நபர் விளக்கமறியலில்!
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 09:52.11 AM GMT ]
30 வயதான பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
தனது வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் விழுந்தே குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருமணமாகி இரண்டு நாட்களில் இப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏதேனும் மனக்கவலையில் இவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியின் நண்பியை வல்லுறவுக்கு உட்படுத்தி பணம் பறித்த நபர் விளக்கமறியலில்
மனைவியின் நண்பியான 37 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை தந்திரமான விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று, அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, அவரைப் படம்பிடித்து, அந்த படத்தை பகிரங்கப்படுத்த போவதாக கூறி, சுமார் 50 லட்சத்து 22 ஆயிரம் ரூபா பணத்தை பறித்த நபர் ஒருவரை அடுத்த மாதம் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபரையே களுத்துறை மேலதிக நீதவான் அயோஷா ஆப்தீன் இன்று விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
முனசிங்க ஆராச்சிலாகே நந்தன பிரசன்ன என்ற இந்த சந்தேக நபர், பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி, அவரை தொடர்பு கொண்டு, தந்திரமான முறையில் இந்துருவ பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு வரவழைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
அந்த பெண்ணிடம் பணத்தை பெற்று கொண்ட பின்னரும், சந்தேக நபர் அடிக்கடி அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten