தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 juli 2013

-வடக்கில் காணாமல் போனோர் தொடர்பில் எந்த முன்னேற்றமும் இல்லை - ஜீன் லெம்பட்!


வடமாகாண சபைத் தேர்தல்: கண்காணிப்பாளர்களை அனுப்பாதாம் ஐரோப்பிய ஒன்றியம்

வீதியால் சென்ற சிறுமி துஸ்பிரயோகம்! சந்தேக நபருக்கு பொலிஸார் வலைவீச்சு: திருக்கோவிலில் சம்பவம்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 01:33.28 AM GMT ]
திருக்கோவில் விநாயகபுரம் பகுதியில் வீதியால் சென்ற ஒன்பது வயது சிறுமி கடத்திச்செல்லப்பட்டு, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 57 வயதான சந்தேக நபரைப் தேடி வருவதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
விநாயகபுரம் 4ம் பிரிவில் வசிக்கும் குறித்த சிறுமி நேற்று தனது வீட்டில் இருந்து அவருடைய பெரியம்மா வீட்டிற்கு மாலை 5 மணியளவில்  சென்றுள்ளார்.
இதன்போது, அவ்வீதியால் வந்த குறித்த நபர், சிறுமியை கடத்திச் சென்று பாழடைந்த வீட்டுக்குள் இழுத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 100 ரூபாயைக் கொடுத்து வெளியில் சொல்ல வேண்டாம் எனக் கூறி தப்பிச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட் சிறுமி தனது தாயிடம் இழுதுகொண்டு நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் தாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபரைப் பொலிஸார் தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாண சபைத் தேர்தல்: கண்காணிப்பாளர்களை அனுப்பாதாம் ஐரோப்பிய ஒன்றியம்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 01:46.09 AM GMT ]
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலுக்கு, கண்காணிப்பாளர்களை அனுப்ப முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய குழுவின் தலைவரான ஜீன் லம்பேர்ட் நேற்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போது இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் பிரதான் தேர்தலுக்கு மட்டுமே கண்காணிப்பாளர்களை அனுப்புவது வழக்கம்.
எனினும், வட மாகாண சபைத் தேர்தலுக்கு கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கோ அல்லது அவற்றைத் தயார் படுத்துவதற்கோ போதிய கால அவகாசம் இல்லை.
இத்தேர்தல் மூலம் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்திற்போது, யுத்தத்திற்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கில் காணாமல் போனோர் தொடர்பில் எந்த முன்னேற்றமும் இல்லை - ஜீன் லெம்பட்
இலங்கையின் வடக்கில், இரண்டு வருடங்களுக்கு முன்னர், காணப்பட்ட நிலைமையே தற்போதும் காணப்படுவதாக ஐரேப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜீன் லெம்பட் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் காணப்படுவதால் பொருளாதார முதலீடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
வடக்கில் சிவில் நிர்வாகம் பெலிஸாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இராணுவத்தின் பிரசன்னம் பொதுவிடயங்கள் பலவற்றில் காணக்கூடியதாகவுள்ளது. இது இவ்வாறு நீடித்தால், நாட்டின் எதிர்கால பொருளாதார முதலீடுகளுக்கு பெரும் பாதிப்பாக அமையும்.
வடக்கில் காணாமல் போனோர் தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமையே காணப்படுகின்றது. அது தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. இது முக்கியமான விடயமாகும். வடக்கில் பல குடும்பங்களின் உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளனர்.
வடக்கில் உட்கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அனைத்தையும் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் சுயாதீனமாகவும் நீதியாகவும் நடைபெற வேண்டும். இங்கு தேர்தல் பிரசார பணிகள் சுயாதீனமாக எவ்வித அழுத்தங்களுமின்றி இடம்பெற வேண்டும்.
இந்நிலையில்இ வடமாகாண சபைத் தேர்தலை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கின்றது.
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இதுவரை இலங்கைக்கு 7வது முறையாக விஜயம் மேற்கொண்டுள்ளது. இம்முறை விஜயத்தில் 6 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளோம்.
நாம் கடந்த காலங்களில் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டோம். குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு. கிளிநொச்சி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு சென்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.
அத்துடன் அரசாங்க பிரதிநிதிகளுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்ததைகளை நடத்தினோம் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten