[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 03:17.15 AM GMT ]
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படவிருப்பதாக வெளியான செய்தி குறித்து தாம் அதிர்ச்சியடையவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார்.
டெல்கியில் நேற்று செய்தியளர்களிடம் பேசும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிக நீண்டகால உறவு நிலவுகிறது.
இலங்கையின் பல்வேறு விடயங்களில் இந்தியா செயற்பட்டு உறுதுணையாக இருந்து வருகிறது.குறிப்பாக தமிழ் மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இந்திய வினைத்திறனாக செயற்பட்டுள்ளது.
இதன்படி இரண்டு நாடுகளும் இடையிலான நட்புறவில் நீண்டதூரம் சென்றுள்ள நிலையில், புதிதாக வருகின்ற போட்டியாளர்கள் குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்குமாறு அவுஸ். பிரதமரிடம் கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 03:40.30 AM GMT ]
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை அவுஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ரட் புறக்கணிக்க வேண்டும் என்று பொதுநலவாய நாடுகளின் சட்டத்தரணிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் எலக்ஸ் வார்ட் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் அதன் அரசாங்கம் போலியான தகவல்களை வெளிப்படுத்தி வருகிறது.
தொடர்ந்து அங்கு அரசியல் மற்றம் மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்ற நிலையில், அங்கு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்கின்றமை, இலங்கையின் செயற்பாடுகளை ஏற்றுக் கொள்வதைப் போன்றது.
கடந்த 2006ம் ஆண்டு பிஜியில் இடம்பெற்ற அரசியல் வன்முறைகளை கருத்தில் கொண்டு, 2009ம் ஆண்டு பொதுநலவாய நாடுகளில் இருந்து அந்த நாடு இடைநிறுத்தப்பட்டது. இதற்கு கெவின் ரட்டின் வாதம் ஒரு முக்கிய இடத்தை வகித்தது.
இந்த நிலையில் தற்போது அவுஸ்திரேலியாவின் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுள்ள கெவின் ரட், இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten