தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 april 2013

ரஷ்யாவின் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் முள்ளிவாய்க்காலுக்கு எப்படி வந்தது ?


ரஷ்ய தயாரிப்பான சில தடைசெய்யப்பட்ட ஏவுகணைகளும் ஆயுதங்களும் முள்ளிவாய்க்காலுக்கு எப்படி வந்தது ? இது தொடர்பான அதிர்வு இணையத்தின் புலனாய்வுச் செய்தி நாளை வெளியாகவுள்ளது. உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட பாரிய குண்டுகளை இலங்கை இராணுவம் பாவித்ததற்கானா ஆதாரப் புகைப்படங்களும் அதிர்வு இணையத்தால் வெளியிடப்படவுள்ளது. இதனைத் தவிர இலங்கை இராணுவமானது தமிழர்களை , கொத்துக் கொத்தாக கொல்லவே எண்ணிய விடையங்களும் ஆதார பூர்வமாக வெளிவர உள்ளது. புலிகள் பொதுமக்களுக்கு கஞ்சி காச்சி கொடுத்த சமயம் அங்கே வரிசையாக நின்ற மக்களை நோக்கி இலங்கை இராணுவம் எப்படி தாக்குதல் நடத்தியது என்பது போன்ற மேலதிக விபரங்களும் வெளியாகவுள்ளது. 

ஐ.நா சபையின் உறுப்பினர் ஒருவர் 2009ல் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். இப் புகைப்படங்களை அவ்வேளையில் பலர் எதிர்பார்த்தார்கள். போர் குற்ற ஆதாரமாக இதனைப் பயன்படுத்த இது ஒரு நல்ல வாய்பாக அமையும் எனப் பலர் எண்ணினார்கள். இருப்பினும் இப் புகைப்படங்களை வைத்திருந்த நபரிடம் உள்ள மெமரி ஸ்டிக்கானது என்கிரிப்ட் பண்ணப்பட்டு இருந்தால் அதில் , இருந்த புகைப்படங்களை பார்க்க முடியவில்லை. ஆனால் தற்போது தொழில் நுட்ப்ப வசதியோடு அது டீ கிரிப்ட் செய்யப்பட்டுள்ளது. எனவே இப் புகைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten