தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் நியூஸிலாந்து பங்கேற்கும்!


இலங்கை அரசுக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சி
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 08:33.51 AM GMT ]
இலங்கை அரசுக்கு எதிராக எதிர்வரும் மே 7 ஆம் திகதி கடுமையான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அன்றைய தினம் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறும் கட்சியின் உயர்ப் பீடக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ரஜாப்டீன் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து உரிய தீர்வு கிடைக்காமையை ஆட்சேபித்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக
ரஜாப்டீன் தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் நியூஸிலாந்து பங்கேற்கும்
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 08:38.52 AM GMT ]
இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் நியூஸிலாந்து பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக திரி நியூஸ் என்ற இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த மாநாட்டில் மகாராணியின் சார்பில் பிரதிநிதி ஒருவரும் தமது அரசாங்கத்தின் சார்பில் ஒருவரும் பங்கேற்கவுள்ளதாக ஜோன் கி குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் அமைச்சரவை மட்ட அமர்வு கடந்த வாரத்தில் இடம்பெற்ற போது, இலங்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பிலும் ஏனைய நாடுகள் தொடர்பிலும் மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படாத போதிலும் அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவை இரகசியமான விடயங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten