தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

காதலனை இரவில் இரகசியமாக அழைத்தார்: குவைத்தில் பெண் கைதானார் !


குவைத்தில் பணிப் பெண்ணாக வேலைபார்த்த இலங்கையர் ஒருவரை, அன் நாட்டுப் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். எஜமான் கொடுத்த புகாரின் பெயரிலேயே அவரும் அவரது காதலரும் கைதுசெய்யப்பட்டதாக மேலும் அறியப்படுகிறது. குவைத் நாட்டவர் ஒருவரின் வீட்டில் வேலைபார்த்து வந்த குறிப்பிட்ட பெண் இரவுவேளையில் தனது காதலனை அங்கே அழைத்ததாக அவர்மேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று இரவு வீட்டு எஜமான் தண்ணீர் குடிக்க சமையல் அறைக்குச் சென்றதாகவும், அவ்வேளை அருகில் உள்ள அறையில் இருந்து வித்தியாசமான குரல் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் பொலிசாருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த பொலிசார் பணிப்பெண்ணின் அறையை திறந்துள்ளார்கள்.

அங்கே அவர் காதலனுடன் இருந்ததைக் கண்ட அவர்கள், அவ்விருவரையும் கைதுசெய்துள்ளார்கள். குவைத் டுபாய் போன்ற அரபு நாடுகளில் பாலியல் தொடர்பாக பல கடுமையான சட்டதிட்டங்கள் இருந்துவருகிறது. இதேவேளை அங்குதான் பல இலங்கை பணிப் பெண்கள் கடுமையாகத் தாக்கப்படுவதும் உண்டு. இன் நிலையில் குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்று தெரியவில்லை. குறிப்பிட்ட நபர் உண்மையிலேயே காதலனா இல்லைக் கணவரா என்பது இதுவரை தெரியவில்லை. மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும் பெண்கள் பலர், ஏற்கனவே மணம் முடித்திருந்தால் கூட, தாம் மணம் முடிக்காத பெண்கள் என்று சொல்லியே வேலையைப் பெறுகின்றனர். பின்னர் அவர்களது கணவர் மார்களும் அன் நாடுகளுக்குச் சென்று, வேறு இடத்தில் வேலைசெய்வது வழக்கம்.

Geen opmerkingen:

Een reactie posten