தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 april 2013

கதிர்காமத்தில் கையைப் பிடிச்சு கொஞ்சிய தமிழ் தாய் !



கடந்த வாரம் மகிந்த ராஜபக்ஷ கதிர்காமத்துக்குச் சென்றுள்ளார். அங்கே அவர் வழிபாட்டை முடித்துகொண்டு திரும்பும்வேளை மணி அடித்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து வெளியே செல்ல முற்பட்டவேளை தமிழ் தாய் ஒருவர் அவரை கண்டு ஆனந்த பெருமிதம் அடைந்தாராம். அவர் மகிந்தரின் கரங்களை எடுத்து முத்தமிட்டுள்ளார். 1 லட்சத்துக்கு மேல் தமிழர்களை கொலைசெய்த ரத்தம் டோய்ந்த மகிந்தரின் கைகளை இவ்வாறு ஒரு தமிழ் தாய் ஏன் முத்தமிட்டார் என்று தெரியவில்லை. ஆனால் சிங்கள மீடியாக்கள் இதனை நன்றாகப் பாவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

குறிப்பிட்ட படத்தை அவர்கள் சிங்கள ஊடகங்களில் பிரசுரித்து, தமிழர்கள் அனைவரும் தற்போது ராஜபக்ஷவின் பக்கம் தான் நிற்கிறார்கள் என்று செய்தி எழுத ஆரம்பித்துள்ளார்கள் என்றால் பாருங்களேன். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க மகிந்தர் கதிர்காமம் சென்ற வேளை இத் தாய் முத்தமிட்டது போதாது என்று அங்கே வழிபாட்டில் ஈடுபட்ட அனைத்து தமிழர்களும் திரண்டு வந்து மகிந்தரை ஆசையோடு வரவேற்றுள்ளார்கள்... இச் சம்பவம் வேறு நடந்து முடிந்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten