தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல, அவசியம்: சீமான் ஆவேசம்


பெண்கள், குழந்தைகள் விற்பனை செய்யப்படும் உலகின் பிரதான நாடாக இலங்கை?
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 02:06.01 AM GMT ]
பெண்கள், குழந்தைகள் விற்பனை செய்யப்படும் உலகின் மிகப் பிரதானமான நாடாக இலங்கை திகழ்கின்றது என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீப மனமேந்திர தெரிவித்துள்ளார்.
கடற்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் தங்காலை கரையின் ஊடாக ட்ரோலர் படகைப் பயன்படுத்தி 35 நாட்களில் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களைக் கடத்துகின்றனர்.
வரலாற்றுக் காலத்தில் காணப்பட்ட அடிமைச் சேவக முறைமை இன்று சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையாக மாற்றமடைந்துள்ளது.
இந்தியாவில் இன்னமும் அடிமைச் சேவக முறைமை காணப்படுகின்றது.
மனித உயிருக்கான மரியாதை அற்றுப் போயுள்ளது.
பிறந்த குழந்தையை கைவிட்டுச் செல்கின்றனர், குழந்தையை வீசி எறிகின்றனர்.
சந்தேக நபர்களை பொலிஸார் சித்திரவதை செய்ய முடியாது.
இந்த ஆண்டில் இதுவரையில் இவ்வாறான சித்திரவதைகள் தொடர்பில் ஒரு சம்பவமே பதிவாகியுள்ளது.
எனினும், ஏதேச்சாதிகரமாக கைது செய்தல் தொடர்பில் 30 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிராக பதிவாகியுள்ளது.
பொலிஸ் நிலையங்களில் ஒரு முறைப்பாட்டை சரியான முறையில் பதிவு செய்யக் கூடிய அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
சட்டவிரோதமான உத்தரவுகளை கடைநிலை அதிகாரிகள் பின்பற்ற வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல, அவசியம்: சீமான் ஆவேசம்
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 02:28.19 AM GMT ]
ஈழத்தை வைத்து இவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்று எம்மை குற்றம் சாட்டினார்கள். இன்று எல்லா அரசியல்வாதிகளும். ஈழத்தைப் பற்றித் தான் பேசுகின்றனர். ஆனால் ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல. அவசியம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் இயக்குனர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பில் பரதேசி பட இயக்குனர் பாலா, ஒளிப்பதிவாளர் செழியன் ஆகியோருக்கு பாராட்டு விழா வடவள்ளி பஸ் நிலையத்தில் நடந்தது.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கார்வண்ணன் தலைமை தாங்கிய இவ்விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் இயக்குனர் சீமான் பேசியபோது,
அழிந்த கலைகளை காப்பதற்காகவும், நலிந்த கலைஞர்களை காப்பாற்றுவதற்காகவும் நாம் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை தொடங்கப்பட்டுள்ளது.
தம்பி பாலா மக்களால் பாராட்டப்பட்ட கலைஞன். முதன் முதலாக மக்கள் கைகளால் விருது வாங்கியவர். மிகச் சிறந்த திறமைசாலி. உலகின் தலைசிறந்த இயக்குனராக உச்சத்துக்கு செல்வார்.
சென்னையில் சினிமா வாய்ப்புக்காக நானும் தம்பி பாலாவும் பல சிரமங்களை அனுபவித்தோம். பசியால் துவண்டு போனாலும் முயற்சியைக் கைவிட மாட்டோம்.
ஒளிப்பதிவாளர் செழியனும் பல சிரமங்களை அனுபவித்து இன்று இந்த நிலையை அடைந்துள்ளார். அவரும் ஒளிப்பதிவில் உச்சம் தொடுவார்.
இவர்கள் களத்துக்கு நேரடியாக வராவிட்டாலும் என்னை அனுப்பி வைத்ததே இவர்கள்தான். இவர்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து பாராட்ட உள்ளோம்.
ஈழத்தை வைத்து இவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். இன்று எல்லா அரசியல் வாதிகளும். ஈழத்தைபற்றித் தான் பேசுகின்றனர்.
ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல. அவசியம் என்று தெரிவித்தார்.
2ம் இணைப்பு
ஈழ வீடுதலை போராட்டத்தில் தமிழக மாணவர்களின் கோரிக்கைகளை ஆதரித்து மதுரை கிழக்கு மாவட்டத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீராவேச பேச்சு (காணொளி)

Geen opmerkingen:

Een reactie posten