தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 april 2013

இலங்கையிடம் இந்தியா கெஞ்சல்!


இலங்கையிடம் இந்தியா கெஞ்சல்!
இந்திய மீனவர்களை தயவுசெஞ்சு சுடாதீங்க

சுடாதீங்க: இலங்கை கடற்படையிடம் இந்தியா கெஞ்சல்!
(நன்றி- தினமலர் )
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013,23:45 IST
மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 23,2013,09:54 IST

புதுடில்லி:"இந்தியா - இலங்கை இடையேயான கடல் எல்லையில், சில நேரங்களில், இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழையும் போது, மனிதாபிபமான முறையில் நடந்து கொள்ளுங்கள் என, இலங்கை அரசை, அவ்வப்போது வலியுறுத்தி வருகிறோம்' என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறினார்.

லோக்சபாவில் நேற்று, கேள்வி ஒன்றுக்கு, எழுத்து மூலம் பதிலளித்த, அமைச்சர் அந்தோணி தெரிவித்ததாவது:இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான கடல் எல்லையில், அவ்வப்போது இரு நாட்டு மீனவர்களும் அத்துமீறி நுழைந்து விடுவது வாடிக்கையாக நடந்து வந்ததால், 2008ம் ஆண்டு, இரு நாடுகளுக்கும் இடையே, உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.அதன்படி,அத்துமீறும் அல்லது எல்லையைத் தாண்டும் இரு தரப்பு மீனவர்களின் படகுகள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என, முடிவாகியது. எனினும், இலங்கை அரசால் குறிப்பிட்டப்பட்ட முக்கியமான பகுதிகளுக்குள், இந்திய படகுகள் நுழைய கூடாது எனவும் முடிவாகியது.

இந்த மாத துவக்கம் முதல், இப்போது வரை, 125 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது. இதுபற்றி அறிந்த உடன், இலங்கை அரசை தொடர்பு கொள்ளும் இந்திய வெளியுறவுத்துறை, இந்திய மீனவர்களிடம் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.பாக் ஜலசந்தி பகுதியில், இந்திய கடற்படை, கடலோர காவல் படை கப்பல்கள், "ஆபரேஷன் தாஷா' என்ற பெயரில், சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணித்து, மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தி வருகின்றன.இவ்வாறு, அந்தோணி தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten