தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 april 2013

மங்களுரில் கைதான அகதிகள் தமிழக முகாம்களுக்கு அனுப்பி வைப்பு!


சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நிலையில் கர்நாடகாவில் வைத்து கைதான இலங்கை அதிகள் 88 பேர் நேற்று தமிழக அகதி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேருந்துகளில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கர்நாடகா மங்களுர் பகுதில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். விசாரணைகளின் போது அவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு அகதி முகாம்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அவர்களுடன் அவுஸ்திரேலியாவுக்கு ஆள்கடத்தும் முகவர்களாக செயற்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten