தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 april 2013

சம்மாந்துறையில் மீண்டும் பிள்ளையார் சிலை தகர்ப்பு!


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய முகப்பிலிருந்த பிள்ளையார் சிலை மீண்டும் விசமிகளால் தகர்க்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் ஸ்தலத்திற்கு ஆலய பரிபாலனசபையினருடன் பார்வையிட்டதுடன், சம்மாந்துறைப் பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளார்.
இக்கோவிலுக்கு அருகில் சம்மாந்துறை மாவட்ட நீதிமன்றம் உள்ளது. நீதிமன்ற பாதுகாப்பு கடமையில் 24 மணி நேர பாதுகாப்புக்கும் பொலிஸ் காவலுக்கு இருந்தும், இக்கோவில் மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாக்குவது சந்தேகத்தை உருவாக்கின்றது என்று மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten