11 தங்கத்துண்டுகளுடன் அகப்பட்ட குடும்பம்
இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 303 விமானத்திலேயே இந்த குடும்பத்தினர் சிங்கப்பூரிலிருந்து தங்கத்தையே இன்று சனிக்கிழமை கடத்திவந்துள்ளனர் என்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் அரசுடமையாக்கப்பட்டதுடன் அவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
கொழும்பு கொம்பனி வீதியைச்சேர்ந்த கணவன் (வயது 31), மனைவி(வயது 28) மற்றும் மனைவியின் சகோதரி (வயது 23) ஆகியோருக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
மகிந்தவின் உறவுகள் மேலும் வலுப்பெறும் முகர்ஜீ
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் உறவுகள் மேலும் எதிர்காலத்தில் வலுப்பெறும் என தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பௌத்த மதத்தை மீளவு எழுச்சிப் பெற செய்யவும், இலங்கையில் சிங்கள பௌத்த தேசியத்தை உருவாக்கவும் அனகாரிக தர்மபால முக்கிய பங்காற்றினார் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய காலணித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலும் தர்மபாலவின் பங்களிப்பு முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் மத வழிபாட்டுத் தளங்களை அமைப்பதற்கும் தர்மபால முக்கிய பங்காற்றியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். அனாகாரீக தர்மாலவை நினைவு கூரும் வகையில் இந்தியாவில் முத்திரையொன்று வெளியிடப்பட்டுள்ளது. முத்திரை வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற போது பிரணாப் முகர்ஜீ இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/84948.html
Geen opmerkingen:
Een reactie posten