தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 oktober 2014

மகிந்தரின் உற்ற நண்பருக்கு நடந்தது என்ன ? இலங்கை சென்று பித்தம் தெளிந்ததா ?

இலங்கை ஐ.நாவோடு போடும் டீல் என்ன ? ராணுவத்தை அனுப்ப சம்மதம் தெரிவித்துள்ளது !

[ Oct 30, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4695 ]
ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதனூடாக காய் நகர்த்தல் ஒன்றைச் செய்ய இலங்கை அரசு முனைப்புக்காட்டி வருவதாக அறியப்படுகிறது. தற்சமயம் ஹெய்டி நாட்டில் சமாதானம் சீர்குலைந்துள்ளது. இன் நிலையில் அங்கே பல அமைதிகாக்கும் படையினர் தேவைப்படுகிறார்கள். ஏற்கனவே அங்கே அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த துருப்புகளை சில நாடுகள் மீளப்பெற்றுவிட்டது. இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்ப மேலதிக அமைதிகாக்கும் படையினர் அன் நாட்டிற்கு தேவைப்படுகிறார்கள். இதன் காரணமாக அதனை இலங்கை சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
ஹெய்டி நாட்டில் ஏற்கனவே 1000 இலங்கை இராணுவத்தினர் பணிபுரிந்து வருகிறார்கள். இதேவேளை மேலதிகமாக சுமார் 700 இராணுவத்தை அனுப்ப அவர்கள், ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஐ.நாவிடம் இது தொடர்பாக இலங்கை பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளது. அதன் அடிப்படையில் மேலதிக இலங்கை இராணுவத்தை அன் நாட்டுக்கு அனுப்ப இலங்கை அரசு ஒத்துக்கொண்டுள்ளது என்று மேலும் அறியப்படுகிறது. ஐக்கிய நாடுகளோடு சுமூகமான டீல் ஒன்றை போட்டு ஒட்டிக்கொள்ள இலங்கை அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது நன்றாக புலப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1324.html

மகிந்தரின் உற்ற நண்பருக்கு நடந்தது என்ன ? இலங்கை சென்று பித்தம் தெளிந்ததா ?

[ Oct 30, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 11850 ]
மகிந்தரின் மிக நெருங்கிய உற்ற நண்பரான கம்லேஷ் ஷர்மா, பல வழிகளில் இலங்கைக்கு உதவி வருகிறார் என்பது யாவரும் அறிந்த உண்மை. கடந்த காமன் வெலத் நாடுகளின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்த இவரே முழு முதற்காரணமாக இருந்தார். கடந்த காலங்களில் இவர் ஒரு எள்ளளவேனும் இலங்கையைப் பற்றி குறை சொன்னதே கிடையாது. அப்படி இருக்க தற்போது இலங்கைக்குச் சென்று நாட்டின் வடபகுதிக்கும் சென்ற கமலேஷ் ஷர்மா அவர்கள் தேர்தல் கண்காணிப்பகம் சரியில்லை, காணமல் போனர்களை தொடர்பாக அறிக்கை ஒன்றைவிடவேண்டும் என்று எல்லாம் பேசியுள்ளார். அவர் கூறிய கருத்துக்கள் இதோ .... இலங்கை சென்ற அவருக்கு பித்தம் தெளிந்ததா இல்லை அது தெளிந்தது போல நடிக்கிறார என்று தான் தெரியவில்லை..
காணாமல்போனோர் தொடர்பிலான தகவல்களை வெளியிடுவது இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா தெரிவிக்கின்றார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்து நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் இந்த ஊடக சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இதன்போது விளக்கமளித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதன் ஊடாக, வெற்றி கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நிரந்தர நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கத்திற்கு தாம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் இந்த ஊடக சந்திப்பில் கமலேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலான தகவல்களை உரிய முறையில் அறிந்து கொள்ளாமல் நீண்டகால நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதனை அறிந்து கொள்ளும் வரை அந்த வடுக்களை அழிக்க முடியாது என்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1326.html

Geen opmerkingen:

Een reactie posten