[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 06:56.30 AM GMT ]
மேற்குலக நாடுகள் மீண்டும் சூழ்ச்சித் திட்டங்களை தீட்டத் தொடங்கியுள்ளதாக ஆளும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
அண்மையில் காலி ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விரைவில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாம் அதைப் பற்றி பேசுவதற்காக வரவில்லை. நாட்டுக்கு எதிராக உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேற்குலக நாடுகள் இலங்கையை சிக்க வைக்க பல தடவைகள் முயற்சித்தன.ஒன்றும் சரிவரவில்லை.
தற்போது மீண்டும் இறுதி முயற்சியாக இலங்கை நெருக்கடிக்குள் ஆழ்த்தும் சதித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டை பாதுகாக்கும் நீல மதில் சுவராக நாம் இருக்க வேண்டும். போரின் இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களை பாதுகாக்க மேற்குலக நாடுகள் முயற்சித்தன.
வெள்ளைக்கொடி ஏந்தி வரும் நபர்களை வெளியேற அனுமதிக்குமாறு கோரியிருந்தன.
ஜனாதிபதி மேற்குலக நாடுகளுக்கு அடிபணியாத காரணத்தினால் நாட்டை சிக்க வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
2005ம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோற்றுவிடுவார் என்ற பலரும் நம்பினர்.
மேற்குலக நாடுகள் பல கோடி ரூபா செலவழித்து ரணில் விக்ரமசிங்கவை வெற்றியீட்டச் திட்டங்கள் செய்தன.
அப்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியும் மஹிந்தவை தோற்கடிக்க முயற்சித்தார்.
மஹிந்த வந்தால் போர் என்றே எதிர்க்கட்சிகளும் பிரச்சாரம் செய்தன என அழப்பெரும தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfuz.html
மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை வான் சாரதி கைது
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 07:20.52 AM GMT ]
உலக சிறுவர் தினமான நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
குறித்த மாணவி பகுதி நேர வகுப்புக்கு செல்வதாக கூறி, பாடசாலைக்கு செல்லாமல், வான் சாரதியுடன் வானில் இருக்கும் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவி பாடசாலையில் உயர்தரத்தல் கல்வி கற்று வருபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் பொலிஸார் கூறினார்.
கண்டி- அம்பிட்டிய வீதியில் வானை நிறுத்தி விட்டு இருவரும் வானுக்குள் இருப்பதை கண்ட ஒருவர் சம்பவம் குறித்து பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfu0.html
Geen opmerkingen:
Een reactie posten