தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 oktober 2014

மட்டு வாவியில் குதித்த மாற்று காதல் ஜோடிகள்! மனைவி பதறல்

யாழில் காதலால் உயிரை மாய்க்கும் காதலர்களின் திடுக்கிடும் பதிவுகள்

ஆண் பிள்ளை வேண்டும் என்று ஆண்டவனுக்கு விரதம் இருந்து ஈன்றெடுத்த பெற்றோர்களை விட்டுவிட்டு, உற்றார், உறவினர்களை அழ வைத்து விட்டு எங்கிருந்தோ வந்த ஒரு பெண்ணுக்காக தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முட்டாள் ஆண்கள் இருக்கும் வரை தவம் இருந்து பெற்றெடுத்த பெற்றோர்கள் காலம் முழுவதும் கண்ணீருடன் வாழ்வதுதான் இறுதியானதாகின்றது.
ஏனெனில், ஆண் பிள்ளை பெற்றெடுத்து விட்டோம். நம் காலம் வரை கவலையின்றி வாழலாம் என்ற நினைப்பு அனைத்துப் பெற்றோர்களிடத்திலும் வருவது இயல்பு. இவ்வாறான பெற்றோர்களின் கனவுகளை மண்ணாக்கி விட்டு மரணிக்கின்றனர் இவ் இளைஞர்கள்.
இதிலும் இந்த இளைஞர்கள் யாருக்காக இறந்தார்களோ, அந்தப் பெண்கள் தற்போது ஒரு சுதந்திரமான வாழ்வை அனுபவித்து வருகின்றனர். தமது குடும்பத்தினருடன், சகோதரர்களுடன் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.


இவை அத்தனையும் தனது குடும்பத்தைத் தலைகுனிய வைத்து விட்டு, நடுத்தெருவில் விட்டு விட்டு இறந்து போன இளைஞர்களுக்குத் தெரியுமா? ஓ… மரணிக்கும் யாழ். காதலன்களே மீண்டுவந்து பாரும் உம் காதலிகளை. அவர்களின் வாழ்க்கையை. இவளுக்காகவா நான் இறந்தேன் என்ற நினைப்பு நிச்சயம் வரும். என்ன செய்வது, போன உயிர் மீண்டு வருவதென்றால் இப் ”மி தாங்குமா?Dath-loves
http://www.jvpnews.com/srilanka/83072.html

மட்டு வாவியில் குதித்த மாற்று காதல் ஜோடிகள்! மனைவி பதறல்

தற்கொலை செய்யும் நோக்குடன் வாவியில் விழுந்த காதல் ஜோடியை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் காதலன் உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் ராஜா (வயது – 22) என்பவரே உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவர் ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.இந்நிலையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே, அத்தொடர்பு ராஜாவின் மனைவிக்கு தெரிந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இதனால் ராஜா தனது புதிய காதலியுடன் தற்கொலை செய்யும் நோக்கில் வாவியில் குதித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.Loves-BattLoves-Batt-01
http://www.jvpnews.com/srilanka/83091.html

Geen opmerkingen:

Een reactie posten