தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

ஐ நா பொதுச்சபை அறிக்கையில் இலங்கை விடயம் !

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையொன்றில் ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் சையத் அல் குசைன் இலங்கை குறித்து குறிப்பிட்டடுள்ளார்.

தன்னுடைய அலுவலகம் முன்னைய ஆணையாளரின் கீழ் கடந்த ஒருவருட காலப்பகுதியில் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆணைக்குழு மூன்று நாடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது,சிரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு. இலங்கை ஆகியனவே இந்த நாடுகள்,எதிர்காலத்தில் பாலாஸ்தீனம், எரித்திரியா மற்றும் ஈராக் குறித்தும் விசாரணைகள் இடம்பெறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் நான் பதவியேற்றபோது, பாரிய நிதிப்பற்றாக்குறைக்கு மத்தியிலும் எனது அலுவலகம் முன்னெடுத்துள்ள பணிகளை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன்.
ஐ.நாவின் முக்கிய தூண்களில் ஒன்றான மனித உரிமைக்கு தற்போது மிக குறைந்தளவு வளங்களே கிடைக்கின்றன, ஏனைய துறைகளுக்கு வழங்கப்படுவதை விட குறைவாகவே மனித உரிமைகளுக்கு வழங்கப்படுகின்றது,இது தொடரமுடியாது
மனித உரிமைகள் மீறப்படும்போது , துஷ்பிரயோகங்களும், மீறல்களும்,பாரிய மோதல்களை உருவாக்கும் போது, சகலவகைகளிலும் இழப்புகள் மிகப்பெரியதாககாணப்படுகின்றது, என தெரிவித்துள்ள அவர் மனித உரிமை மீறல்களை கண்டுபிடித்து எச்சரிப்பதற்கான தனது அமைப்பின் திறனை அதிகரிக்குமாறும், ஆபத்தான சமிக்ஞைகள் வெளியானவுடன் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/84754.html

Geen opmerkingen:

Een reactie posten