மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அரைக்காற்சட்டை அணிந்து கொண்டு மீண்டும் சிறையில் களி திண்பார் என்று அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி,உடுநுவரையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அலுவலகத்தை திறந்து வைத்து பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது ஆட்சிக்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் வளரவிடவில்லை.
தனது தம்பி அனுரவை பிரதமராக்குவது அவரது லட்சியமாக இருந்தது. ஆனால் விதி மஹிந்தவை பிரதமராக்கியது.
அதன் பின் 2005ல் ரணிலை வெற்றிபெற வைக்க சந்திரிக்கா முயற்சித்தார்.
வடக்கின் தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் காய்நகர்த்தி மஹிந்த அந்தத் தேர்தலிலும் வென்றார்.
பின்பு விடுதலைப் புலிகள் தொடர்பான சவாலையும் அவர் வெற்றிகரமாக எதிர்கொண்டார்.
இப்போது புலம்பெயர் புலிகள் மற்றும் சிலர் ஜனாதிபதிக்கு எதிராக சதி செய்கின்றனர். ஜெயலலிதாவும் அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றார்.
ஜெயலலிதா தற்காலிகமாகவே தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அரைக்காற்சட்டை அணிந்து கொண்டு அவர் மீண்டும் சிறையில் களி திண்ணும் காலம் தொலைவில் இல்லை.
ஜனாதிபதி மஹிந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்லதொரு பக்கபலமாக இருப்பார்.
இதன் மூலம் இந்தியாவில் ஜனாதிபதிக்கு இருக்கும் எதிர்ப்புகளும் முறியடிக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmu6.html
Geen opmerkingen:
Een reactie posten