தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 oktober 2014

மூத்த மொழியான தமிழின் சொந்தக்காரர்களாகிய நாம் ஆட்சியதிகாரமற்ற இனமாக உள்ளோம்: துரைராஜா



சட்டவிரோத ஜனாதிபதி தேர்தல் வேண்டாம்! நாடு முழுவதிலும் ஜே.வி.பி கருத்தரங்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 03:46.42 AM GMT ]
சட்டவிரோதமான ஜனாதிபதி தேர்தல் வேண்டாம் என்ற தொனிப்பொருளில் ஜே.வி.பி கட்சி நாடு முழுவதிலும் கருத்தரங்குகளை நடாத்த உள்ளது.
நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியல் அமைப்பை மீறி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட முயற்சிக்கின்றார்.
இது குறித்து மக்களுக்கு பூரண விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக நாடு முழுவதிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட உள்ளனது.
மேலும் பிரதான நகரங்களில் துண்டுப் பிரசூரங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
“மஹிந்தவிற்கு மூன்று தடவைகள் முடியாது – சட்டவிரோத ஜனாதிபதி தேர்தல் வேண்டாம்” என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் ஜே.வி.பி மக்களை விழிப்புணர்வடையச் செய்யும் என கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தயங்கப் போவதில்லை என கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடருமாறு விமல் வீரவன்ச ஜே.வி.பி ஆலோசனை
ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவிற்கு எதிராக வழக்குத் தொடருமாறு வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச ஜே.வி.பி கட்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக தேர்தலில் போட்டியிடுவது சட்டவிரோதமானது என்றால் ஒவ்வொறு இடங்களுக்கு சென்று கருத்தரங்கு நடாத்துவதனை விடவும், உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்வதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.
கொழும்பு மருதானையில் அடுக்கு மாடி குடியிருப்பு அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து சிலர் பீதியடைந்துள்ளனர்.
ஜனாதிபதி மூன்றாம் தடவைக்காக போட்டியிட முடியாது. சட்டவிரோதமானது என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதியினால் மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா என உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோர முடியும்.
மாறாக வீதிகளில் கூட்டங்களில் நடத்தி ஜனாதிபதி போட்டியிட முடியாத என்பதில் அர்த்தமில்லை.
ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிட்டாலும் வெற்றியீட்டுவார் என தெரிந்து கொண்டவர்கள் இவ்வாறு போலியாக சட்ட தர்க்கமொன்றை முன்வைக்கின்றார்கள்.
சந்திரிகா பண்டாரநாயக்க தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
சந்திரிகா பொது வேட்பாளராக போட்டியிட்டால் தவறில்லை. எனினும் ஜனாதிபதி போட்டியிடக் கூடாது.
ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் மேற்குலக நாடுகளைக் கொண்டு அறிக்கைகளை வெளியிட சிலர் முயற்சிக்கின்றனர்.
தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை. மஹிந்த மூன்றாம் தடவைக்காக போட்டியிட முடியாது என மேற்குலக நாடுகள் அறிக்கை வெளியிட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும்.
நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளும் நோக்கில் சட்ட தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.உண்மையில் சட்ட தர்க்கங்கள் மேற்குலக நாடுகளின் தேவைகளுக்காகவே முன்வைக்கப்படுகின்றன.
தோல்வியடையும் ரணில் விக்ரமசிங்க நூறு தடவைகளும் போட்டியிடலாம், வெற்றியீட்டும் மஹிந்தவிற்கு மூன்றாவது தடவையான போட்யிட முடியாது என்பது எந்த வகையில் நியாயமாகும் என விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnq6.html

மூத்த மொழியான தமிழின் சொந்தக்காரர்களாகிய நாம் ஆட்சியதிகாரமற்ற இனமாக உள்ளோம்: துரைராஜா
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 03:31.10 AM GMT ]
மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் மொழிக்குச் சொந்தக்காரராகிய நாம் இன்று ஆட்சியதிகாரமற்ற ஒரு இனமாக உள்ளோம் என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சிறப்புத் தலைவர் துரைராஜா தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் ஜேர்மனி ஹம் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
மேலும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் தனது உரையில்,
உலகத்தில் 6 மொழிகள் தான் உலகில் செம்மொழியாக இருக்கின்றது. அதில் தமிழ்மொழியும் ஒரு செம்மொழி என்பதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறேன்.
ஒரு மொழி செம்மொழியாவதற்கு குறைந்தது 1500 ஆண்டுகளுக்கு மேல் பாவனையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் மொழி 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.
அவ்வாறான மூத்த மொழியின் சொந்தக்காரர்கள் நாம். உரிமைக்காரர்கள் நாம். ஆனால் இன்று ஆட்சியதிகாரமில்லாத ஒரு இனமாக உள்ளோம்.
கிட்டத்தட்ட உலகத்திலே 160 நாடுகளுக்கு மேல் தமிழர்கள் வாழ்கின்றார்கள். எமக்கென்று நாடு இல்லை. ஒரு ஆட்சியதிகாரமில்லாத நிலையில் வாழ்கிறோம் என்பதை எத்தனை பேர் சிந்தித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnq5.html

Geen opmerkingen:

Een reactie posten