ஐக்கிய தேசியக் கட்சியின் சவாலை எளிதாக எடுக்கமுடியாது!- பசில் ராஜபக்ச
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 12:16.51 AM GMT ]
தேசிய தேர்தல் ஒன்று தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு சவாலை விடுத்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக போட்டியிட்டாலும் தமக்கு பிரச்சினையில்லை.
தாம் ஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது உறுதி என்ற தோரணையில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த சவாலை விடுத்துள்ளது.
இந்தநிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேர்தலுக்கு தயாராகிவருவதாக அமைச்சர் கூறினார்.
எனினும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை அவர் கூறவில்லை.
அதனை ஜனாதிபதி அல்ல. தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானிப்பார் என்று பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.
இலங்கையை ஜனாதிபதி தலைமையிலான கட்சியே பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்ததாகவும் அவர் நினைவுபடுத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlr4.html
இலங்கையில் சித்திரவதைகளும் பாலியல் வன்முறைகளும் தொடர்கின்றன!- பிரித்தானிய அமைப்பு
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 12:34.38 AM GMT ]
அமைப்பின் தலைவர் ஜூலியட் கொஹென் ஜெனீவா மனித உரிமைகள் குழுவின் அமர்வில் நேற்று பங்கேற்றபோது இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
எனினும் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் கரிசனை கொள்ளாது இருந்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இலங்கையில் தொடரும் பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் என்பன தொடர்பில் இலங்கை அரசாங்கம் மறுப்பை வெளியிட்டு வருகிறது.
எனினும் அதற்கான ஆதாரங்களை தாம் மனித உரிமைகள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக கொஹேன் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற நெருப்பால் சுட்ட 73 வீத சம்பவங்களும் 60 வீத பாலியல் வன்முறைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் என்ற கூறப்படுவோர் மீது தொடர்ந்தும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே இந்த விடயத்தில் உரிய நடவடிக்கைகள் அவசியம் என்று கொஹென் கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlr6.html
Geen opmerkingen:
Een reactie posten