தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

கச்சதீவை மீளப் பெற வேண்டும்: தமிழகத்தின் புதிய முதலமைச்சர்!

நெடுந்தீவை சுற்றுலா வலயமாக்க அரசாங்கம் தீர்மானம்
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 09:05.03 AM GMT ]
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு பகுதியை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நெடுந்தீவில் அழகான பல இடங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக இயற்கையாக குதிரைகள் உலாவித்திரியும் நெடுந்தீவு மேலும் பல சிறப்புகளை கொண்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்களை நிர்மாணிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அப்பகுதி சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும்.
இதன் மூலம் நெடுந்தீவில் வாழும் சுமார் 1500 குடும்பங்களின் பொருளாதார நிலை வளர்ச்சி பெறும் என்றும் அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVep7.html

கச்சதீவை மீளப் பெற வேண்டும்: தமிழகத்தின் புதிய முதலமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 08:55.35 AM GMT ]
கச்சத்தீவை மீள பெற வேண்டும் என்று தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பில் அவர் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கச்சத்தீவை மீளப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்திருந்தார்.
எனினும் அவ்வாறு செய்ய முடியாது என்று மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்றுள்ள முதல்வர் மீண்டும் அது குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVep6.html

Geen opmerkingen:

Een reactie posten