தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

அம்மாவின் சிறையால் சீற்றத்தில் சீமான்….

ஜெயாவிற்கு உதவப் போறீங்களா?? மோடிகிட்ட கேட்பாராம் சாமி…

”தீர்ப்பு தினத்தன்று எதற்காக பெங்களூருக்கு வந்தீர்கள்?”
”ஏதாவது அவசர சூழ்நிலை ஏற்பட்டு புகார்தாரர் என்ற முறையில் திடீரென்று என்னைச் சிறப்பு கோர்ட் ஜட்ஜ் குன்ஹா அழைத்தால்…? இதற்காகவே, பெங்களூரு ஐ.ஐ.எம்-ல் ‘இந்தியன் ஐடென்டி’ என்ற தலைப்பில் பேச ஏற்பாடு செய்தேன். மதியம் ஒரு மணி அளவில் ஏர்போர்ட்டில் வந்து இறங்கி, காரில் போகும்போது, ‘ஜெயலலிதா குற்றவாளி’ன்னு தகவல் சொன்னாங்க. அப்பத்தான் ஜட்ஜ் மீதிருந்த மதிப்பு ஒரு படி உயர்ந்தது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நான் இத்தனை வருடங்களாகக் கண்காணித்து வந்தேன். ஏதேதோ காரணம் சொல்லி இழுத்தடிச்சாங்க. நிறைய பொய் சொல்லி கோர்ட்டுல மாட்டிக்கிட்டாங்க. எழுதி வெச்சுக்கங்க. ஜெயலலிதா மாதிரியே ஊழல் பண்ணிய குற்றத்துக்காக, சோனியாவும் ராகுலும் நிச்சயமா ஜெயிலுக்குப் போவாங்க. நான் போக வைப்பேன்.”
”தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று எதிர்பார்த்தீர்களா?”
”ஒரு ரூபாய்தான் அரசாங்க சம்பளம் வாங்கினார் ஜெயலலிதா. ஆனா, 66 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துச் சேர்த்தாங்க. எங்கேயிருந்து பணம் வந்துச்சுன்னா… நாலு வருஷமா அவங்களோட ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்துல கிடைச்ச வருமானம்னு சொன்னாங்க. ஒரு ஹெக்டேர் நிலத்துல திராட்சை உற்பத்தி அவ்வளவு வருமா? அப்படி உலக அளவுல சாதனை பண்ணிய விவசாயி ஃபிரான்ஸ்ல இருக்கார். அவர் எவ்வளவு உற்பத்தி செஞ்சாரோ, அதைவிட 10 மடங்கு அதிகமா ஜெயலலிதா கணக்குக் காட்டினாங்க. அதுதான் பெரிய காமெடியே. இதை நான் ஆரம்பத்திலேயே கோர்ட்ல சொன்னேன். அதன்பிறகுதான், கோர்ட் நடவடிக்கைகள் துரிதமாச்சு. இப்போ ஜட்ஜ்மென்ட் வந்துவிட்டதே என்று நான் சும்மா இருக்கப் போவதில்லை. ஜெயலலிதா மீது வருமான வரித்துறை போட்ட கேஸ் இருக்குதே? அதைப் பொறுத்திருந்து பாருங்கள். அதிலும் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.”
”இதெல்லாமே அரசியல் பழிவாங்கல் காரணமாகப் போடப்பட்ட வழக்கு என்கிறார்களே?”
”முன்பெல்லாம் ஜெயலலிதாவுக்கு தேசபக்தி இருந்துச்சு. விடுதலைப்புலிகள் விவகாரத்திலும் வைகோவை ‘பொடா’வில் பிடித்துப் போட்டபோதும் அவரது நடவடிக்கைகள் நன்றாக இருந்தன. 1996-ல் என்னோட பிறந்தநாளுக்கு என் வீட்டுக்கே வந்தார். அப்போது நான் அவரிடம் ஐ.ஏ.எஸ் ஆபீஸர் சந்திரலேகா மீது ஆசிட் வீசிய விவகாரம் பற்றி பேசினேன். அவர் சொன்ன பதிலில் எனக்குத் திருப்தி இல்லை. அப்போது நான் அவரிடம், ‘நான் போட்டிருக்கும் எந்த கேஸையும் வாபஸ் பெறமாட்டேன். ஆனா.. கருணாநிதியை வீழ்த்த உங்களோட அரசியல் ரீதியா ஒத்துழைப்பேன்’ன்னு சொன்னேன். அதற்கு அவரும் சம்மதித்தார். ஆனா, இப்போது ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்க, கடவுளோட சாபமும் ஒரு காரணம். இந்து மதத் தலைவர் ஜெயேந்திரரை ஜெயில்ல போட்டாங்க. கைதிகளோட அவரை உட்கார வெச்ச சம்பவத்தை நினைச்சா நெஞ்சு பதறுது. அவரை நான் வேலூர் ஜெயில்லபோய் பார்த்தப்ப.. சோகமாக இருந்தார். இனி ஜெயலலிதாவுக்கு அரசியல் அதிகாரமே இல்லை!”
”மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திடீரென ஜெயலலிதாவை வந்து பார்த்தாரே?”
”தீர்ப்புக்கு முன்னாடி, பல்வேறு யூகங்கள் கிளம்பின. நான் பிரதமர் மோடிகிட்ட நேரடியா கேட்டேன். ‘இந்த வழக்குல ஜெயலலிதாவுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணப் போறீங்களான்’னு! அவர், ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’னு சொல்லிட்டார்.”
”தீர்ப்பு வெளியானதும் தமிழகத்துல நடந்த வன்முறை சம்பவங்களை பி.ஜே.பி எப்படிப் பார்க்கிறது?”
”தமிழக நிலவரத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குகிட்ட தெரிவிச்சேன். சட்டம் – ஒழுங்கு நிலவரம் பற்றி அறிக்கை கேட்டிருப்பதாகச் சொன்னார். அதன்பிறகுதான், கவர்னர் இங்கே இருக்கிற உயர் அதிகாரிகளைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தியிருக்கிறார். மக்களை பாதிக்கிற அளவுக்கு சட்டம் – ஒழுங்கு நிலைமை தமிழகத்தில் தொடர்ந்து நீடித்தால், ஆர்ட்டிக்கிள் 356-யைப் பயன்படுத்த வேண்டிவரும்’’ என்று அஸ்திரம் வீசியபடி முடித்தார்.
– ஆர்.பி.
http://www.jvpnews.com/srilanka/83127.html

அம்மாவின் சிறையால் சீற்றத்தில் சீமான்….

நமது நாட்டின் ஆட்சி நிர்வாகம் தீட்டும் திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்காமல் போவதற்கு மூல காரணமாக இருக்கின்ற ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் இரு வேறுபட்ட கருத்திற்கு இடமில்லை. அதுவும் ஆட்சியின் தலைமையை ஏற்பவர்கள் தன்னலமின்றி, மக்கள் நலனையும், நாட்டின் எதிர்காலத்தையுமே கருத்தில்கொண்டு ஆட்சி புரிய வேண்டும் என்பதை இத்தீர்ப்பு உணர்த்தியிருக்கிறது. எனவே சிறப்பு நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது.
இத்தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் சுப்ரமணியன் சுவாமி, ஜெயலலிதா ஆட்சி விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள், ஐ.எஸ்.ஐ.ஆதரவுடன் செயல்படும் தீவிரவாதிகள் ஆகியோருக்கு பாதுகாப்பு அளித்து வந்ததாகவும், எனவே அந்த ஆட்சியை கலைத்துவிட்டு, ஆளுநர் ஆட்சியை தமிழ்நாட்டில் பிரகடனம் செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
இந்த சாமி இப்படித்தான் உளரும் என்று கூறி இக்கருத்தை புறக்கணித்துவிட முடியாது. இதற்குப் பின்னால் ஒரு பெரும் சதி வலை இருப்பதாக நாம் தமிழர் கட்சி கருதுகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அ.இ.அ.தி.மு.க. அரசு, சட்டப் பேரவையை பொறுத்தவரை இன்றளவும் பெரும்பான்மை பலமுடைய கட்சியாகும். ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்துள்ள நிலையில், அக்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவரே தமிழ்நாட்டின் முதல்வராக ஆக முடியும். இப்படிப்பட்ட சட்ட ரீதியான நிலை இருக்கும்போது, தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை ஏற்படுத்தவோ அல்லது சட்டப் பேரவையை முடக்கி வைக்கும் முயற்சியிலோ மத்திய அரசு ஈடுபடுமானால் அது அரசமைப்பிற்கு எதிரானதாக இருக்கும். அப்படி ஒரு நடவடிக்கையை தமிழக மக்களும் நாம் தமிழர் கட்சியும் கடுமையாக எதிர்ப்போம்.
சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள், ஏதோ தாங்கள் ஊழலற்ற ஆட்சியையும் நிர்வாகத்தை இந்த நாட்டினருக்கு வழங்கியது போல அறிக்கை வெளியிட்டு கருத்து கூறி வருவது கடைதெடுத்த அயோக்கியத்தனமாகும். ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே பூச்சி மருந்து அடிப்பதில் ஊழல் செய்து பெருமை பெற்ற தி.மு.க., சர்காரியா கமிஷன் அளவிற்கு புகழ் பெற்றதோடு நிற்காமல், இந்த நாடு கண்ட மாபெரும் ஊழலான 2ஜி குற்றச்சாற்றை சுமந்துகொண்டு நீதிமன்றத்தின் படிகளில் காலத்தை கழித்துக்கொண்டிருக்கிறது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்ததில் ஊழல், கார்கில் போரில் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு கட்டிய அடுக்குமாடி குடியிருப்பை தங்களுடைய உறவுனர்களுக்கு ஒதுக்கிக்கொண்ட ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என்று கடலில் இருந்து வானம் வரை தீட்டிய திட்டங்கள் அனைத்திலும் ஊழல் செய்து இந்நாட்டின் மானத்தை காற்றில் பறக்கவிட்ட கட்சி காங்கிரஸ். அதன் தலைவர்கள் இன்று வந்த தீர்ப்பை பற்றி சிலாகித்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. தங்கள் ஊழல்களை நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்கிற இறுமாப்பில் இவர்கள் கருத்து கூறிக்கொண்டிருகிறார்கள்.
தென்னகத்தில் ஆட்சியை பிடித்த ஒரே மாநிலம் என்ற பெருமையோடு கர்நாடகத்தில் ஆட்சியமைத்த பாரதிய ஜனதா செய்த ஊழல், அரசு நிலைத்தை வீட்டு உறவுகளுக்கு எழுதி எடுத்துக்கொண்டதில் ஆரம்பித்து, ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் வரை நாடே சிரிக்கும் அளவிற்கு ஊழல் செய்துவிட்டு, இவர்களும் ஊழலுக்கு எதிரான தீர்ப்பை வரவேற்றுப் பேசுவது ஈயத்தைப் பார்த்து சிரித்ததாம் பித்தளை என்கிற தமிழ் பழமொழியை நினைவூட்டுகிறது.டெல்லி ஆட்சியை கைப்பற்றியவுடன் டெல்லி மாநில சட்டசபை உறுப்பினர்கள் விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க படாத பாடுபடும் பா.ஜ.க. ஊழல் எதிர்ப்பை பேசுகிறது.
இப்படிப்பட்ட அரசியல் யோக்கியுடைய தேசியக் கட்சிகளே மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் ஏறுவார்களாம், கனவு காண்கிறார்கள்! தமிழினத்தின் விடுதலையை அழித்தவர்கள், தமிழ்நாட்டின் உரிமைகளை குழிதோண்டிப் புதைத்தவர்கள் மீண்டும் தமிழினத்தின் தலைமையேற்கத் துடிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. தமிழ்நாட்டில் இனி தமிழ்த் தேசிய இனத்தின் அரசியலும், ஆட்சியும்தான் ஏற்படுமே தவிர, இந்த ஊழல் மரங்களின் அழித்தொழிக்கப்பட்ட வேர்கள் துளிர்விட ஒருபோதும் தமிழினத்தவர் அனுமதிக்க மாட்டார்.
இந்த நாட்டின் விடுதலைக்காக தன் சொத்து, சுகம், வாழ்க்கை, தொழில் என்று அனைத்தையும் இழந்த மாபெரும் தலைவர்கள் செய்த தியாகத்தால் சுதந்திரம் பெற்ற இந்நாடு இன்று தன்னல மயக்கத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரின் உள்ளத்திலும் பொது நல உணர்வு ஏற்பட்டால் மட்டுமே ஊழல் என்ற பேயை இந்நாட்டு நிர்வாகத்தில் இருந்தும், கல்வி முதல் மருத்துவம் வரை கொட்டிக் கொடுத்து முன்னிலை பெறும் மனப்பாங்கு நீங்கும். அன்றே ஊழலற்ற சமூகம் பிறக்கும்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
http://www.jvpnews.com/srilanka/83130.html

Geen opmerkingen:

Een reactie posten