தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

வடக்கில் இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதையே வன்னி மக்கள் விரும்புவராம்! (படம் இணைப்பு)

கொச்சிக்கடையில் மீட்கப்பட்ட தமிழ்ப் பெண் சடலத்தில் மர்மம் (படம் இணைப்பு)
நீர்கொழும்பு, கொச்சிக்கடைப் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண், கொலை செய்யப்பட்டார் என்பது பிரேத பரிசோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்தில் வடக்கு கட்டான, 'கோல்டன் கேட்' தோட்டத்தைச் சேர்ந்த கோவில்பிள்ளை குமாரவதி எனும் 40 வயதுடைய தமிழ்ப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டார். குறித்த பெண் மரணமடைந்து நான்கு நாட்கள் கழித்து அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கடந்த 27 ஆம் திகதி மீட்ட நீர்கொழும்பு பொலிஸார் அதனை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்திருந்தனர்.

சடலத்தை பிரேத பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.என்.ருஹுல் ஹக் தனது அறிக்கையில் உயிரிழந்தவரின் அடிவயிற்றில் மூன்று ஆழமான கத்திக்குத்துக் காயங்கள் காண்ப்பட்டன என்றும் இதனால் அதிக இரத்தப்பெருக்கு ஏற்பட்டு மரணம் சம்பவித்தது எனவும் ஊர்ஜிதப்படுத்தினார். எனினும் இந்த மர்ம மரணம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
02 Oct 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1412258101&archive=&start_from=&ucat=1&
வடக்கில் இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதையே வன்னி மக்கள் விரும்புவராம்! (படம் இணைப்பு)
வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டுமா என்பது குறித்து வாக்கெடுப்பு இடம்பெற்றால் இராணுவம் அங்கு நிலைகொண்டிருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாகவே வன்னி மக்கள் வாக்களிப்பார்கள்.

ஏனெனில் இராணுவம் குற்றமற்ற சமாதானமான சமூகத்தை உறுதிசெய்துள்ளது இவ்வாறு தெரிவித்துள்ளார் கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படையினரின் தளபதி மேஜர் ஜெனரல் சுடந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: பாதுகாப்பு படையினர் விடுதலைப் புலிகள் மீணடும் தலைதூக்குவதை தடுப்பதற்காக வேவு பார்க்கவேண்டியது அவசியம். நாங்கள் பொதுமக்களின் நிகழ்வுகளில் குறுக்கீடு செய்வதில்லை. எவராவது பயங்கரவாத நடவடிக்கைகளை, அரச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறார்களா என்றே கண்காணிக்கிறோம்.

இராணுவத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் எந்தவித பாதூரமான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகளுக்கு புத்துயுர் அளிக்க முற்பட்ட வேளை கொல்லப்பட்ட அப்பன், கோபி போன்றவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்படாதவர்கள். - என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
02 Oct 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1412258263&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten