தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 juli 2014

அளுத்கமவில் இராணுவ மீள்கட்டுமானப் பணிக்கு களுத்துறை நீதிமன்றம் இடைக்கால தடை

இனப்படுகொலை புரிந்த இலங்கைக்கு சலுகைகள் வழங்கக்கூடாது: ஆர்.சரத்குமார்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 05:19.38 AM GMT ]
இலங்கைக்கு வழங்கிய சலுகையை திரும்பப் பெறுவது தவறில்லை என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு கடற்பகுதிகளில் மீன்பிடிக்க உரிமை இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நமக்கு உரிமையான பகுதி நமக்கு திரும்பக் கிடைக்க வேண்டும் என்ற நிலையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டால் தான் அது நியாயமானதாக இருக்கும்.
நடைபெற இருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கச்சத்தீவைத் திரும்பப்பெறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கை அரசோடு பேசி கச்சத்தீவை உடனடியாக மீட்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருப்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
அதுவே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை ஓரளவு குறைக்க உதவும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
வரலாறு காணாத வகையில் இனப்படுகொலை புரிந்த இலங்கைக்கு, உலகமே எதிராக குரல் கொடுத்து நடவடிக்கை எடுக்கத் தயாராகி வரும்போது நாம் அவர்களுக்கு அரசியல் சட்டத்திற்கு புறம்பாக அளித்த சலுகையை திரும்பப் பெறுவது ஒன்றும் தவறில்லை என சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjsz.html
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்: இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 05:35.53 AM GMT ]
இலங்கையினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பதாக இந்திய புலனாய்வுத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவினை சிறிலங்கா அரசாங்கம் பேணி வருகின்றமை தொடர்பில் இந்தியா அதிருப்தி கொண்டிருந்தது.
இதற்கிடையில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் இலங்கையை பயன்படுத்தி கடல்மார்க்கமாக தென்னிந்தியாவுக்கு ஊடுறுவுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இந்தியாவின் பாதுகாப்பு தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் உருவாகும் என்ற அச்சத்தில் இந்தியா இருப்பதாகவும் இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இந்திய அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் முக்கிய அவதானம் செலுத்தி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காகவே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவின் அழைப்பின் பேரில் அங்கு செல்வதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjs1.html
அளுத்கமவில் இராணுவ மீள்கட்டுமானப் பணிக்கு களுத்துறை நீதிமன்றம் இடைக்கால தடை
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 06:02.56 AM GMT ]
அளுத்­கம மற்றும் பேரு­வளை பொலிஸ் பிரி­வு­களில் அண்­மையில் ஏற்­பட்ட வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்ட சில பகு­தி­களில் இரா­ணு­வத்­தி­னரின் மீள்கட்­டு­மான பணிக்கு களுத்­துறை நீதிவான் நீதி­மன்றம் நேற்று இடைக்­கால தடையை விதித்­துள்ளது.
அத்­துடன் குறித்த வன்­மு­றை­களில் உயி­ரி­ழந்த இரு­வரின் பிரேத பரி­சோ­த­னை­களை முன்னெ­டுத்த சட்ட வைத்­திய அதி­கா­ரிக்கும் நீதவான் அழைப்­பாணை பிறப்­பித்­துள்ளார்.
குறித்த வன்­மு­றையின் போது உயி­ரி­ழந்த இருவர் தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று களுத்­துறை மேல­திக நீதவான் ஆய்ஷா ஆப்தீன் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே இந்த தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
நேற்­றைய தினம் இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ணை­களின் போது உயி­ரிழ்ந்த இரு நபர்­களின் சார்­பிலும் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு மேல­க­தி­க­மாக சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலவர் உபுல் ஜய­சூ­ரிய தல­மை­யி­லான விஷேட சட்­டத்­த­ர­ணிகள் குழு மன்ரில் ஆஜ­ரா­னது.
இதில் சட்­டத்­த­ரணி உபுல் ஜய­சூ­ரி­ய­வுக்கு மேல­தி­க­மாக சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் செய­லாளர் அஜித் பத்­தி­ரன சட்­டத்­த­ரணி பந்­துல வீர­சிங்க உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.
இதன் போது மன்­றுக்கு விஷேட வேண்­டுகோள் ஒன்றை முன்­வைத்த சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலவர் உபுல் ஜய­சூ­ரிய உள்­ளிட்ட குழு­வினர் கடந்த மாதம் 15ம் திகதி அளுத்­கம மற்றும் பேரு­வளை பொலிஸ் பிரி­வு­களில் இடம்­பெற்ற வன்­மு­றை­களின் போது இருவர் உயி­ரி­ழந்தும் 120 ற்கும் மேற்­பட்ட வீடுகள் சேதப்படுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அரச இர­சா­யன பகுப்­பாய்வுப் பிரி­வினர் அங்கு சென்று பரி­சோத­னை­களை மேற்­கொள்­ள­வில்லை என சுட்­டிக்­காட்­டினார்.
இத­னை­விட  குறித்த வன்­மு­றை­களில் உயி­ரி­ழந்­த­வர்­களில் ஒருவர் கத்திக்குத்­துக்கு இலக்­காகி உயி­ரி­ழந்­துள்­ள­தக சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­துள்­ளது. அதனால் குறித்த இரு ஜனா­ஸாக்­க­ளையும் மீண்டும் தோண்டி எடுத்து பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள உத்­த­ர­விட வேண்டும்.
அத்­துடன் இவ்­விரு இளை­ஞர்­களும் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­கா­கிய இடம் மட்­டு­மல்­லாது எரிக்­கப்­பட்ட வீடுகள் மற்றும் கடை­களில் அரச இர­சா­யன பகுப்­பாய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.
அதனால் அந்த இடங்­களில் உட­ன­டி­யாக அரச இர­சா­யன பகுப்­பாய்­வு­க­ளுக்கு உடன் உத்­த­ரவு பிறப்­பிப்­ப­துடன், அந்த இடங்­களில் மட்டும் தற்­போ­தைக்கு இரா­ணு­வத்­தி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள மீள் கட்­டு­மான நட­வ­டிக்­கை­களுக்கு தற்­கா­லி­க­மான தடை உத்­த­ர­வொன்றை பிறப்­பிக்க வேண்டும் என சட்டத்தர­ணிகள் சங்­கத்­தி­னரால் மன்றில் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.
இதனை அடுத்து முன்­வைக்­கப்­பட்ட வாதங்­களை ஆராய்ந்த நீதிவான் ஆய்ஷா ஆப்தீன், அரச இர­சா­யன பகுப்­பாய்வு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் வரை துப்­பாக்கிச் சூடு இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் இடம், தீயினால் சேத­ம­டைந்த கடைகள் மற்றும் வீடு­களில் மீள் கட்­டு­மான நட­வ­டிக்­கை­களை தொடர இரா­ணு­வத்­தி­ன­ருக்கு தற்­கா­லிக தடை உத்­த­ரவை பிறப்­பித்தார்.
அத்­துடன் எதிர்­வரும் 31ம் திக­திக்கு வழக்கை ஒத்­தி­வைத்த நீதிவான் அன்­றைய தினம் அரச இர­சாயன பகுப்­பாய்வு அறிக்­கையை மன்றில் சமர்­பிக்­கு­மறு பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார்.
அத்­துடன் வன்­மு­றை­களில் உயி­ரி­ழந்த மொஹம்மட் ஸஹ்ரான் மற்றும் மொஹம்மட் சிராஸ் ஆகியோரின் மரணம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரியையும் அன்றைய தினம் மன்ரில் ஆஜராகுமாறு நீதிவான் அழைப்பாணை பிறப்பித்தார்.
நேற்றைய வழக்கு விசாரணைகளில் உயிரிழந்த இரு இளைஞர்களின் குடும்பத்தினர் சார்பில் சட்டத்தரணிகளான ஹஸ்ஸாலி ஹுசைன்,எம்.சால்மான், சப்ராஸ் ஹம்சா, ரமீஸ் பசீர் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjs4.html

Geen opmerkingen:

Een reactie posten