தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 juli 2014

மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்...! கொழும்பில் கையெழுத்து வேட்டை!

கொழும்பில் முதியவர் ஒருவர் தீக்குளிப்பு
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 12:26.59 PM GMT ]
கொழும்பு பிரிஸ்டல் வீதியில் முதியவர் ஒருவர், தனக்கு தானே தீமூட்டி கொண்டதை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவரது உடலில் பெரும் பகுதி இடங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
64 வயதான விமல் தயாரத்ன என்ற நபரே இவ்வாறு தீமூட்டிக் கொண்டுள்ளார்.

மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்...! கொழும்பில் கையெழுத்து வேட்டை
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 08:15.47 AM GMT ]
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி "இல்லை" என்போம் எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று இடம்பெறுகின்றது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இந்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. இதில் பல்வேறுபட்ட மக்களும் கையெழுத்து இட்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkx2.html

Geen opmerkingen:

Een reactie posten