தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 2 juli 2014

கூட்டமைப்பினர் மோடியை சந்தித்தாலும் இலங்கை மீது இந்தியா அழுத்தம் பிரயோகிக்காது!



லண்டனில் வீடொன்றில் தீ விபத்து: தமிழ்ப் பெண் பலி
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 05:12.29 AM GMT ]
லண்டனில் லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று  அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் தமிழ்ப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மரணம் அடைந்த பெண் வீட்டின் முதலாவது தளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டில் இருந்து வெளிப்புறமாக பாய்ந்து தீயினால் பாதிக்கப்பட்டு காயமைடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வோத்தம்ஸ்ரோ, வூட்போர்ட், லெயிஸ்ரன் பகுதிகளில் இருந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் அதிகாலை 3.05 மணியவில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீக்கான காரணம் மற்றும் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத் தீ விபத்தினால் உயிரிழந்தவர் 55 வயதுடைய தமிழ்ப் பெண்ணொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ள போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவற்துறையினரால் இதுவரை பெயர் வெளியிடப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkq7.html
கூட்டமைப்பினர் மோடியை சந்தித்தாலும் இலங்கை மீது இந்தியா அழுத்தம் பிரயோகிக்காது!
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 04:39.31 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்துப் பேசினாலும், இலங்கை மீது இந்தியா எவ்­வா­றான அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கிக்­க­ாது. இலங்கை­யா­னது இறை­மை­யுள்ள ஒரு­மைப்­பாட்டைக் கொண்ட நாடு என்­பது மோடிக்கு நன்­றா­கவே தெரியும் என்று ஊட­கத்­துறை அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சியல் கட்சி என்ற வகையில் உலகில் எந்­த­வொரு தலை­வ­ரையும் சந்­தித்துப் பேச்சு நடத்­தலாம். அதற்­காக இந்­தியா எமது உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் ஒரு­போதும் தலை­யி­டாது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இம்­மாதம் புது­டில்­லிக்கு விஜயம் மேற்­கொண்டு இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­திக்­க­வுள்­ளமை குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
அர­சியல் கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு இந்­திய பிர­த­மரை சந்­தித்துப் பேச்சு நடத்­தலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்துப் பேசு­கின்­றனர் என்­ப­தற்­காக இந்­தியா இலங்கை மீது எவ்­வா­றான அழுத்­தத்­தையும் பிர­யோ­கிக்­காது. எந்­த­வொரு நாடும் இன்­னொரு நாட்டின் இறைமை பாதிக்­கும்­படி செயற்­ப­டக்­கூ­டாது.
அந்த வகையில் இலங்­கையின் உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் இந்­தியா தலை­யி­டாது என்­ப­துடன் அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கிக்­காது. இல்­ஙகை இறை­மையும் ஒரு­மைப்­பாட்­டையும் கொண்ட நாடு என்­பது சிரேஷ்ட தலை­வ­ராக இருக்கும் நரேந்­திர மோடிக்கு நன்­றா­கவே தெரியும். இலங்­கையின் உள்­ளக விவ­கா­ரங்­களில் இந்­தியா தலை­யி­டாது.
அந்­த­வ­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூறு­வ­தனை நம்­பிக்­கொண்டு இந்­திய பிர­தமர் எவ்­வா­றான அழுத்­தத்­தையும் எமக்கு பிர­யோ­கிக்­க­மாட்டார். அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையில் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் சந்திப்பு தொடர்பில் எமக்கு எந்த சிக்கலும் இல்லை.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkq5.html

Geen opmerkingen:

Een reactie posten