இதையடுத்து, அங்கிருந்த காவலரணில் இருந்த அமெரிக்க எல்லைப்புற காவல் படையினர் வெளியே வந்து ஹெலிகாப்டரை பார்த்தனர். அந்த காவலரணில் அமெரிக்க கொடி தெளிவாக பறக்கவிடப்பட்டுள்ள போதிலும், ஹெலிகாப்டரில் இருந்து தரையில் நின்றவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது. சமீபகாலமாக மெக்சிகோ எல்லைக்காவல் படையை சேர்ந்தவர்கள் அமெரிக்க எல்லைக்குள் வந்து செல்வது அதிகரித்து உள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, இப்படியான சுமார் 500 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவங்களின்போது, 131 மெக்சிகோ நாட்டு எல்லைக் காவல் படையினர், அமெரிக்க ரோந்துப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எல்லைப் பகுதியின் ஊடாக மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக வரும் ஆட்களை தடுப்பதற்காக, எல்லையில் இரும்பு வேலி அமைப்பது என்ற முடிவு, 2006-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதுவரை சுமார் 1000 கி.மீ. நீளத்துக்கு அமெரிக்க எல்லையில் இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்க – மெக்சிகோ எல்லையின் வெறும் மூன்றிலொரு பகுதிதான். மீதி எல்லைப் பகுதியில் வேலி கிடையாது.
http://www.athirvu.com/newsdetail/320.html
Geen opmerkingen:
Een reactie posten