முஸ்லிம்களின் கடைகள் உடைக்கப்பட்டதாக ஐ.நாவிடம் போலி அறிக்கை சமர்ப்பிப்பு - பேருவளை இராணுவக் கட்டுப்பாட்டில்..!– விக்ரமபாகு
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 11:57.31 PM GMT ]
பிரான்ஸ் புலம்பெயர் முஸ்லிம் அமைப்பு என்ற அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வன்முறைச் சம்பவங்களின் போது 17 பள்ளிவாசல்களுக்கும், 80 முஸ்லிம்களின் கடைகளுக்கும் பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களின் வர்த்தக உரிமை முடக்கப்பட்டுள்ளதாகவும்ää 2012ம் ஆண்டு முதல் இதுவரையில் முஸ்லிம்கள் 260 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அளுத்கம சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பேருவளை இராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது!– விக்ரமபாகு
பேருவளை பிரதேசம் இராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
700 இராணுவத்தினர் குறித்த பிரதேசத்தில் கடமையில் ஈடுபடு;த்தப்பட்டுள்ளனர். அங்கு ஓடுகின்றார்கள், இங்கு ஓடுகின்றார்கள். கடைகளை திருத்துகின்றார்கள், கழிவகற்றுகின்றார்கள்.
பேருவளைக்கு இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த திட்டமிட்டிருந்தமை இந்த விடயங்களின் மூலம் தெரியவந்துள்ளது. பேருவளை தற்போது இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
குப்பைகளை அகற்றுதல், கடைகள் வீடுகளை புனரமைத்தல் உள்ளிட்ட சகல பணிகளையும் இராணுவத்தினர் மேற்கொள்கின்றனர்.
பிரதேச செயலகமோ அல்லது வேறும் நிறுவனங்களோ தேவையில்லை. பேருவளை, யாழ்ப்பாணத்தை போன்று இராணுவக் கட்டுப்பட்டின் கீழ் இயங்குகின்றது.
வித்தியாசமான ஓர் ஆட்சியின் கீழ் நாம் வாழ்கின்றோம் என விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjq1.html
யாழில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை பதியும் பணிகளில் பொலிஸ் புலனாய்வுத்துறை!– வட மாகாணசபை உறுப்பினர் கேள்வி
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 12:53.44 AM GMT ]
மேற்படி தகவல் திரட்டல் நடவடிக்கை முஸ்லிம் வியாபாரிகளை மாத்திரம் மையப்படுத்தியதாக அமைந்திருக்கின்றது. இதன் காரணமாக முஸ்லிம் வியாபாரிகள் மத்தியில் அமைதியற்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.
மேற்படி தகவல் திரட்டல் நடவடிக்கை எதற்காக முஸ்லிம் வியாபாரிகளிடம் மாத்திரம் மேற்கொள்ளப்படவேண்டும்? இதற்கான காரணம் என்ன என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பிலான வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் இன்றைய தினம் 3 ஜூலை 2014 என திகதியிடப்பட்ட கடிதம் மூலம் பிரதி பொலிஸ் மா அதிபரை கேட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில், “நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாதத்தாக்குதல் நடைபெற்று இன்னமும் முழுமையாக ஓய்வுறாத சூழலில் இத்தகைய தகவல் திரட்டொன்றினை பொலிஸார் எதற்காக மேற்கொள்கின்றார்கள்?
அண்மையில் நாட்டில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கோர இன அழிப்புத் தாக்குதலுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் நிகழ்விற்கு யாழ்ப்பாண முஸ்லிம் வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள், எனவே அதன் காரணத்தினாலா எமது தகவல்கள் திரட்டப்படுகின்றன போன்ற முக்கிய ஐயங்கள் அவர்கள் மத்தியில் எழுகின்றன.
மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மேற்படி தகவல் குறித்து என்ன காரணத்திற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும், அவர்களிடம் தோன்றியிருக்கின்ற அச்ச உணர்வை நீக்க வேண்டிய தேவையும் எனக்கிருக்கின்றது.
எனவே மேற்படி விடயம் குறித்து தங்களிடம் இருந்து எழுத்துமூல பதிலொன்றினை எதிர்பார்த்து நிற்கின்றேன். என மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjq5.html
Geen opmerkingen:
Een reactie posten