தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 5 juli 2014

இந்தோனேசிய ஏ.ரீ.எம் மெசினில் இலங்கையர் கைவரிசை: 32 லட்சம் அமெரிக்க டாலரை சுருட்டினார்கள் !

இந்தோனேஷியாவில் ஏ.ரீ.எம். மோசடியில் ஈடபட்ட இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடியுடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. சுமார் 32 லட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் கனேடியர்களுடன் இணைந்து கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோசடி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கணனிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் 50 மில்லியன் இந்தோனேஷிய ருபியாக்களும் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. மிகவும் நுட்பமான முறையில் உளவுக் கமராக்களை பொருத்தி தகவல்களை திரட்டியுள்ள, சிவா, வினோத், ராஜன் மற்றும் வாலி ஆகிய நான்கு இலங்கையர்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 260 போலி ஏ.ரீ.எம் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. இது இந்தோனேசிய வரலாற்றில் பெரும் மோசடியாக கருதப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/363.html

Geen opmerkingen:

Een reactie posten