18 July, 2013 by admin
காசா பகுதியில் இருந்து இந்த ஏவுகணைகள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் எனவும், கய்ரோவில் எகிப்திய ராணுவத்துக்கு எதிரான தாக்குதலுக்காக இவை கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகிறது. எகிப்தில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதில் இருந்து, ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்த பாலஸ்தீனிய ஹமாஸ் இயக்கம். அல்-காய்தா ஆதரவு சலாஃபி இயக்கம் ஆகியவை தயாராகி வருவது குறித்து இன்று கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது கிடைத்துள்ள இந்தச் செய்தி, அதை ஊர்ஜிதம் செய்கிறது.
ஏவுகணைகள் ஏற்றப்பட்டிருந்த ட்ரக் டிரைவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, ஏவுகணைகள் கய்ரோவுக்குதான் செல்ல அனுப்பப்பட்டவை என ஒப்புக்கொண்டார் என்றார் முக்ஹாபாரத் செய்தித் தொடர்பாளர்.
Geen opmerkingen:
Een reactie posten