தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 juli 2013

16 வயது தனலட்சுமியை 8 வயது தம்பி முன்னர் கற்பழித்த இராணுவம் !




"குமாரபுரம்" என்று அழைக்கப்படும் எல்லைக் கிராமம் ஒன்று திருகோணமலையில் உள்ளது. இனிய மாலைப் பொழுது ஒன்றில் அக் கிராமம் அமைதியாக இருந்தது. ஆனால் அன்று மாலை 4.00 மணிக்கு கேட்ட துப்பாக்கிச் சத்தத்தால் மக்கள் அலறி அடித்து ஓடினார். அச்சிறிய கிராமத்தில் இருந்த மக்கள் "ஆமி வருகிறான்" என்று சொல்லிக்கொண்டு மறைவிடங்களை நோக்கி ஓடினார்கள். அக் கிராமத்துக்குள் புகுந்த இலங்கை இராணுவம் ஈவு இரக்கம் இல்லாமல் 24 தமிழர்களைச் சுட்டுக்கொன்றது. இதில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளும் அடங்கும். இதேவேளை கடைக்குச் சென்றுவிட்டு தனது 8 வயது தம்பியோடு வீடு திரும்பிக்கொண்டு இருந்த தனலட்சுமி துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன், அருகில் இருந்த கடை ஒன்றுக்கு பக்கத்தில் பதுங்கி இருந்தார். ஆனால் அங்கே வந்த இராணுவத்தினர் அவரை கதறக் கதற அருகில் உள்ள பால் பண்ணை ஒன்றுக்கு இழுத்துச் சென்றார்கள். 

கூட்டமாகச் சேர்ந்து 16 வயதேயான அத் தமிழ் சிறுமியைக் கற்பழித்தார்கள். மூன்று கைக் குழந்தைகள், 11 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்ட 8பேர், 21 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்ட 6பேர், மற்றும் 31 வயதுக்கும் 50 வயதுக்கும் உட்பட்ட 4 பேர் , என மொத்தமாக இராணுவத்தினர் கொன்று குவித்த தமிழர்களின் எண்ணிக்கை, 24 ஆகும். இதில் கற்பழிக்கப்பட்ட 2 தமிழ் பெண்களும் அடங்குவார்கள். இக் கொலைகள் 11ம் திகதி பெப்ரவரி மாதம் 1996ம் ஆண்டு நடைபெற்றது. திருகோணமலையில் உள்ள கல்வையடி இராணுவ முகாமில் இருந்த இராணுவத்தினரே இக் கொலைகளுக்கு காரணம் என, நேரில் கண்ட சாட்சிகள் பலர் தெரிவித்தார்கள். இதனையடுத்து நடைபெற்ற அடையாள அணிவகுப்பில், குற்றம் புரிந்த இராணுவத்தினரை அக்கிராம மக்கள் அடையாளம் காட்டினார்கள். பொலிசாரும் அவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் அவர்கள் அனைவருக்கும் அடுத்த சில மாதங்களில், ஜாமீன் கிடைத்தது. அவர்கள் விடுதலையாகி வெளியே வந்துவிட்டார்கள். ஆனால் கடந்த 17 வருடங்களாக இந்த வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. அதாவது சந்தேகத்தின் அடிப்படையில், பல தமிழர்கள் வருடக் கணக்கில் சிறையில் வாடுகிறார்கள். ஆனால் குற்றம் புரிந்தார்கள் என்று சாட்சிகளால் அடையாளம் காணப்பட்ட இக் குற்றவாளிகள், இதுவரை உல்லாசமாக வாழ்ந்து வருகிறார்கள். ஏன் என்று கேட்டால் அவர்கள் அனைவரும் சிங்களவர்கள் ஆச்சே. சுமார் 17 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெறவுள்ளது. அதுவும் திருகோணமலையில் அல்ல ! சிங்களவர்கள் கூடுதலாக வசிக்கும் அனுராதபுரத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் சாட்சியமளிக்கவுள்ள தமிழர்கள், தற்போது மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கு சிங்கள மொழி கூடத் தெரியாது. இன் நிலையில் அவர்களை அனுராதபுரம் அழைத்து மிரட்டி பணியவைக்க இலங்கை அரசு முயல்கிறது என்று சந்தேகிக்கப்படுகிறது.

சலிப்படையும் இத் தமிழர்கள் பிரச்சனையே வேண்டாம் என்று நினைத்து, சாட்சி சொல்லாது போகலாம். இதுபோன்றதொரு நிலையை ஏற்படுத்தவே இலங்கை அரசு தற்போதும் முயற்சித்து வருகிறது. எப்பாவமும் அறியாத சிறுபிள்ளைகள் முதல், முதியவர்கள் வரை படுகொலை செய்த இந்த இராணுவத்திற்கு தண்டனை எப்போது கிடைக்குமா ? குமாரபுரம் படுகொலைகளின் நினைவுகளைச் சுமந்து.....

அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான்.

Geen opmerkingen:

Een reactie posten