தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 april 2013

முள்ளிவளையில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரை: அமைச்சர் றிசாட்டின் அடியாட்கள் அடாவடித்தனம்!


முள்ளிவளை மத்தியில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்களின் வீடுகளை தீக்கிரையாக்கி அமைச்சர் றிசாட் தன்னுடைய கோரத்தாண்டவத்தை இன்று அதிகாலை ஆடியுள்ள நிலையில், முள்ளியவளையிலிருந்து தமிழர்களை விரட்டியடிக்கும் அரசாங்கத்தின் உள்நோக்கம் வெளிப்பட்டிருக்கின்றது.
முள்ளியவளை பகுதியில் 540ஏக்கர் காட்டை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்ற அமைச்சர் றிசாட் கடும் பிரயத்தனம் எடுத்திருந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த தமிழ் மக்கள் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் 10 பேர் கொண்ட குழுவினர் குறித்த பகுதிக்குள் நுழைந்து 4 பொதுமக்களின் அரை நிரந்தர வீடுகளையும், சொத்துக்களையும் எரித்து தீக்கிரையாக்கியுள்ளனர்.
இதனுடன் நின்றுவிடாது, அங்கிருந்த ஏனைய மக்களின் வீடுகளையும் எரித்து தீக்கிரையாக்க அவர்கள் முற்பட்டுள்ளனர்.
காடழிப்பு தொடர்பாக இரு இனங்களுக்கிடையில் அண்மையில் முறுகல் நிலை ஏற்பட்ட பகுதியில் அமைந்துள்ள நான்கு குடிசைகளே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது.
இதனால் அக் குடிசையில் இருந்த உடமைகள் முற்றாக சேதமடைந்துள்ளன. சம்பவம் இடம்பெற்ற வேளை இவ் வீடுகளில் இருந்தவர்கள் தேவைகளின் பொருட்டு வேறு இடங்களுக்கு சென்றிருந்ததனால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று மக்கள் தெரிவித்தனர்.
திருமதி செந்தூரன் நிலோஜனா என்ற 27 வயதுடைய இரு பிள்ளைகளின் விதவைத்தாயின் குடிசையும் திருமதி தங்கமணி, திருமதி சுரேஸ்குமார் சுமங்கலி, செல்லத்தம்பி முகுந்தன் ஆகியோரது வீடுகளுமே இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனினும் மக்கள் உஷாரடைந்து அமைச்சரின் அடியாட்களை எதிர்க்க முற்பட்ட நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ய முற்பட்டவேளை, இதற்கும் அமைச்சருக்கும் தொடர்பில்லை என்ற பாணியில் பொலிஸார் குறித்த சம்பவத்தை திசைதிருப்ப முயற்சிப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு முள்ளியவளை கிராமமே கொதிப்பிலும், விரக்தியிலும் ஆழ்ந்துள்ளது.
முள்ளியவளையில் வீடுகள் தீவைப்பு
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மத்தி என்ற கிராமப் பகுதியில் மீள்குடியேறியுள்ள தமிழ்க் குடும்பங்களின் நான்கு குடிசைகள் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு தீயிடப்பட்டிருப்பதாக ஊர்மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இரவு ஒரு மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச்சேதமோ காயமோ எற்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை.
முள்ளியவளை மத்தி என்ற கிராமப் பகுதியில் தமிழ்க் குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள பிரதேசத்தில் முல்லைத்தீவுக்கான பிரதான வீதியோரத்தில், இராணுவத்தினர் தமக்கு முகாம் அமைப்பதற்காக காணி தேவையெனக் கூறி அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு கோரியிருந்ததாகவும், அதற்கு அந்த மக்கள் உடன்பட மறுத்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்களுக்கு இந்த இடத்தையும் இதனையொட்டி காடாக இருக்கின்ற காணிகளையும் வழங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது, அதனையும் அந்த மக்கள் எதிர்த்து போராடியிருந்தனர்.
இதனையடுத்து, இந்த மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு அப்பால் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளைத் துப்பரவு செய்யும் பணிகள் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு காடுகள் அழிக்கப்படுகின்ற எல்லைக்கு அருகில் உள்ள 4 குடிசைகளே சனியிரவு அடையாளம் தெரியாதவர்களினால் தீயிடப்பட்டிருக்கின்றன.
இரவு ஒரு மணிபோல நெருப்பு எரிந்த வெளிச்சத்தைக் கண்டு வெளியில் வந்து பார்த்தபோது, நான்கு குடிசைகள் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டதாக நேரில் கண்ட அயல் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten