தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 april 2013

காமன்வெலத் நாடுகளின் பணத்தை திருடிய தமிழர் !


பிரித்தானியாவில் உள்ள காமன்வெலத் நாடுகளின் அலுவலகத்தில் ஐ.ரி பிரிவில் வேலைபார்த்த பிரதீப் மூர்த்தி என்னும் தமிழர் சுமார் 375,000 ஆயிரம் பிரித்தானியப் பவுண்டுகளை களவாடியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. மேற்படி காமன்வெலத் அலுவலகத்தில் வேலைபார்த்த இவர், பிரயாணச் செலவுகள், எயிட்ஸால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், மற்றும் புதிய அபிவிருத்தித் திட்டம் என்று கூறி பெருந்தொகைப் பணத்தை, களவாடியுள்ளார். தனது பள்ளி நண்பர்கள் மூவரை இவர் தொடர்புகொண்டு, அவர்கள் வங்கிக் கணக்கிற்க்கு சுமார் 300,000 பவுண்டுகளை அனுப்பியுள்ளார். பின்னர் அப் பணத்தில் பாதிப்பணத்தை தனக்கு தருமாறு கூறி அவர் அதனைப் பெற்று சூதாடியுள்ளார். கடும் சூதாட்டப் பழக்கத்துக்கு ஆளான இவர், வேலைக்குச் செல்ல முன்னரும் பின்னர் வேலையில் இருந்து திரும்பும் போதும் சூதாடுவது வழக்கம் என்று நீதிமன்றில் சொல்லப்பட்டுள்ளது. 

பின்னர் இறுதியாக எயிட்ஸால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஒரு அபிவிருத்தித் திட்டம் செய்யவிருப்பதாகக் கூறி 58,000 பவுண்டுகளைக் கோரியுள்ளார். இங்கே தான் சிக்கல் ஆரம்பமாகியுள்ளது. குறிப்பிட்ட அந்த புரொஜெக்ட்(அபிவிருத்தி திட்டத்தில்) சந்தேகம் கொண்ட மேலதிகாரிகள் இதனை நன்கு ஆராய்ந்து பார்த்துள்ளார்கள். இதனையடுத்து அது போலியான திட்டம் என கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் முழுமையான விசாரணை நடைபெற்றது. இதில் காமன்வெலத் நாடுகளின் நிதியில் இருந்து இவர் சுமார் 375,000 பவுண்டுகளைக் களவாடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நீதிபதி இவருக்கு 15 மாத சிறைத்தை தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளார்.

இவருடன் இணைந்து பணப் பரிமாற்றத்துக்கு உதவிய 3 நண்பர்களுக்கும் தலா 8 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. சூதாட்டப் பழக்கம் காரணமாகவே பிரதீப் இவ்வாறு செய்துவிட்டார் என அவர் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Geen opmerkingen:

Een reactie posten