தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 november 2014

இராணுவத்தின் தலைமைத்துவப் பயிற்சியில் மாணவியுடன் சிப்பாய் தவறாக நடக்க முயற்சி?

கூட்டமைப்பினரின் மலையகப் பயணம் அரசியல் நோக்கம் கொண்டதல்ல: சுரேஷ் எம்.பி
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 03:47.46 PM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் மலையகத்திற்கான பயணம் என்பது எந்தவித அரசியல் நோக்கம் கொண்டதுமல்ல, அம்மக்களிடம் நாம் வாக்குக் கேட்டு வரப்போவதுமில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மலையக விஜயம் குறித்து, மலையகத்திலுள்ள அரசியல் தரப்புக்கள் கூறியிருக்கும் கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதுளை, கொஸ்லாந்தைக்கு போனதென்பது, இயற்கை அனர்த்தத்தினால் பாரியளவில் பாதிக்கப்பட்டு, தமது உறவுகள், உடமைகளை இழந்த மக்களுக்கு வட கிழக்கு தமிழ் மக்களின் அனுதாபங்களையும், அவர்களது துன்பங்களில் நாங்களும் பங்கெடுக்கின்றோம் என்பதையும் தெரிவிப்பதே நோக்கமாக இருந்தது.
வடக்கு கிழக்கில் பல்வேறுபட்ட கால கட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களின் காரணமாக இடம்பெயர்ந்து வந்து வடக்கு கிழக்கில் குடியேறிய பல்லாயிரக்கணக்கான மலையக மக்கள் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கின்றார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் அவர்களுடைய உறவுகளும் இருப்பார்கள் என்பதும், அவர்கள் தொடர்பாக அக்கறைப்பட வேண்டிய கடமைப்பாடு அம்மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமக்கு இருக்கின்றது என்பதையும் செந்தில் தொண்டமான் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
2005 ஆம் ஆண்டிலும், 2011 ஆம் ஆண்டிலும் மண்சரிவுகள் ஏற்படக் கூடிய அபாயங்கள் இருக்கின்றது என்பதை இலங்கை அரசாங்கம் தெரிவித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரசே தெரிவித்துள்ளது.
அப்படி கூறப்பட்டிருப்பின் ஊவா மாகாண அமைச்சாராக இருக்கும் செந்தில் தொண்டமான் சரி, ஏனைய அமைச்சர்களும் சரி இந்த மக்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை இதுவரை எடுத்திருக்கின்றீர்கள்.
பாரிய அழிவுகள் ஏற்பட்ட பின்பும் ஆளும் கட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக ஏனையோரில் குற்றம் காணுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை.
அது மாத்திரமல்ல மலையகத்திற்கான எங்களுடைய பயணம் என்பது எந்தவித அரசியல் நோக்கம் கொண்டதுமல்ல. மலையக மக்களிடம் நாங்கள் வாக்கு கேட்டு வரப்போவதுமில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்பது அடக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக செயற்படுபவர்கள். ஆகவே அடக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்கள் மலையகத்தில் இருந்தாலும், வேறு எங்கிருந்தாலும் குரல் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை.
ஆகவே அவ்வாறு பேசக் கூடாதென்று யாரும் எமக்கு தடையுத்தரவு போடமுடியாது. செந்தில் தொண்டமான் கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் பிழையாக நடக்கவில்லை.
ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மலையக தமிழ் மக்களுக்கு காணிகள் வழங்கி அவர்கள் நிரந்தர குடிகளாக இருப்பதை உறுதிப்படுத்தியவர்கள் நாங்கள்.
யுத்தத்தினால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதும், எமது மக்களின் காணிகளை இராணுவம் பறித்தெடுக்கின்றது என்பது உண்மை. ஆனால் அவற்றை நாங்கள் பெற்றுக் கொள்ள இறுதிவரை போராடுவோம் என்பதையும், மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற மாற்றுத் திட்டங்களை அரசு முன்னெடுக்காவிட்டால், அவர்களுக்கு வட கிழக்கில் இடம் இருக்கின்றது என்பதையும் மீண்டும் வலியுறுத்தி கூற விரும்புகின்றேன்.
தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் மலைய தமிழ் மக்களுக்கு மாத்திரமல்லாமல் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கும் அவர் தலைவராக இருந்தார் என்பதையும் அவரது பேரனாக இருக்ககக் கூடிய செந்தில் தொண்டமான் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன், அவரது பாதையில் பயணிப்பார் எனவும் எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhuy.html
வட­மா­கா­ண­ச­பைக்கு 5831 மில்­லியன் ஒதுக்கப்பட்டாலும் திறைசேரிக்கு 1876 மில்­. மட்­டுமே வரு­கின்­றது!- சி.வி.கே
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 03:35.31 PM GMT ]
5831மில்­லியன் ரூபா வட­மா­கா­ண­ச­பைக்கு ஒதுக்­கப்­பட்­டாலும் திறை­சே­ரிக்கு 1876 மில்­லியன் ரூபா மட்­டுமே வரு­கின்­றது. அதனை இந்த வருட நிறை­வுக்குள் பூர­ண­மாக பயன்­ப­டுத்­துவோம் என வடக்கு மாகாண சபையின் தவி­சாளர் சி.வி.கே.சிவ­ஞானம் ­தெ­ரி­வித்தார்.
ஐ.தி.சம்­பந்­தனின் நீங்­காத நினை­வுகள் நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் கொழும்பு தமிழ்ச்­சங்­கத்தில் நடை­பெற்­றது.
இந்­நி­கழ்வில் பிரதம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அங்கு மேலும் கூறி­ய­தா­வது,
வடக்கு மாகாண சபை என்­பது இலங்கைத் தமிழர் வர­லாற்றில் முத­லா­வ­தாக கிடைத்த பெரும்­பான்மைத் தமிழ் ­பே­சு­வர்­களைக் கொண்ட கட்­ட­மைப்பு. அது தமிழ் தேசிய இலக்கின் சுதந்­தி­ரத்­திற்கு வழி­வ­குக்கும் என்றோ அல்­லது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்றோ எப்­போதும் நாம் கூற­வில்லை. ஆனால் அது ஒரு பல­மாகும்.
வடக்கு மாகா­ண­சபை எத­னையும் செய்­ய­வில்லை என குறை கூறு­கின்­றார்கள். அதனை நாம் ஆரோக்­கிய விமர்­ச­ன­மாக எடுத்­துக் ­கொள்­கின்றோம். அவ்­வி­டத்­தி­லி­ருந்து முன்­ன­கர முயற்­சிக்­கின்றோம்.
அத்­தி­சையில் எமது பய­னத்தை திருப்­பி­யி­ருக்­கின்றோம். இந்­நாட்டில் காணப்­படும் எட்டு மாகா­ண­ச­பை­க­ளுக்கும் எமக்கு வேறு­பாடு காணப்­ப­டு­கின்­றது.
இந்த அர­சாங்கம் எதி­ராக பார்க்கும் மாகா­ண­ச­பை­யாக வடக்­கு ­மா­கா­ண­சபை உள்­ளது. ஆகவே எதுவும் எமக்கு இல­கு­வாக இருக்­கப்போ­வ­தில்லை என நம்­பு­கின்றேன்.
வடக்கு மாகா­ணத்­திற்­கான இந்­த ­வ­ருட நிதி ஒதுக்­கீடு 5,831மில்­லியன் ரூபா­வாகும். இதில் வட­மா­கா­ண­ச­பையின் திறை­சே­ரிக்கு வரும் நிதியின் அளவு 1876மில்­லியன் ரூபா மட்­டுமே. எஞ்­சி­யுள்ள 3856மில்­லியன் ரூபா எங்­க­ளு­டைய பெயரில் இருந்­தாலும் கூட எமது திறை­சேரி அல்­லது அதி­கா­ரிகள் ஊடாக செல­வி­டப்­ப­டு­வ­தில்லை.
அதனை மத்­திய அர­சாங்­கத்தின் உத்­த­ரவின் பேரில் வேறு திணைக்­கள அதி­கா­ரி­களே செய்­கின்­றார்கள்.
இந்­நி­லையில் குறித்த அதி­கா­ரி­களிள் செல­வி­டாத தொகை­யையும் உள்­ள­டக்கி வட­மா­கா­ண­சபை 20வீதமே செல­வி­டு­கின்­றது எனக் கூறு­கின்­றார்கள்.
உதார­ண­மாக தற்­போது இர­ணை­மடு திட்­டத்தை எடுத்தால் 1280 கோடி ரூபாவும் அது­போன்றே மத்­தி­ய­ அ­ர­சாங்­கத்தின் கீழே உள்­ள­டங்­கு­கின்­றது.
ஆகவே எமக்கு வழங்­கப்­பட்ட 1876 மில்­லியன் ரூபா­வையும் இந்த வருட முடி­வுக்குள் பயன்­ப­டுத்­துவோம்.
நாம் பல பிரே­ர­ணை­களை நிறை­வேற்­றினோம் என விமர்­சிக்­கின்­றார்கள்.
முத­லா­வ­தாக எமது உணர்­வு­களை வெளிப்­ப­டுத்த வேண்­டிய தேவை­யி­ருக்­கின்­றது.
குறிப்­பாக காணி என்­பது அர­சியல் வாழ்க்­கையின் ஆரம்­ப­மாக இருந்­தி­ருக்­கின்­றது. தமி­ழர­சுக் ­கட்சி, காங்­கிரஸ் கட்சி ஆகி­ய­வற்றின் தோற்­றப்­பாடு நில உரி­மையும் அதன் பாது­காப்­பி­னையும் அடி­ப்ப­டை­யா­கவே கொண்­டி­ருக்­கின்­றது.
பண்­டா-­ செல்வா, டட்லி- செல்வா, இந்­திய – இலங்கை ஒப்­பந்தம், சந்­தி­ரிக்­காவின் முன்­மொ­ழி­வுகள் எப்­பொ­ழுதும் நில­உ­ரிமை, பாது­காப்பு, அந்­நி­லத்­தி­லுள்ள சனத்­தொ­கையின் பாது­காப்பு ஆகிய எண்­ணங்கள் விரும்­பியோ விரும்­பா­மலோ இருந்­தி­ருக்­கின்­றன.
13வது அர­சியல் யாப்பில் காணி மாகா­ண­ச­பையின் விடயம் என தெளிவாக குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.
முதல் முறை­யாக மாகாண சபை என்­ற ­வ­கையில் முறைப்­ப­டி­யான தீர்­மா­னத்தை இயற்றி இருக்கும் அதி­கா­ரங்­களை முறைப்­ப­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் கோரி­யுள்ளோம்.
அவ்­வா­றி­ருக்­கையில் மாகா­ண­சபைக்கு காணி அதி­கா­ர­மில்லை பொய்­  கூ­று­கின்­றார்கள் என எம்­முடன் இருப்­ப­வர்­களே கூறு­வ­தா­னது எமது சமூகம் சார்ந்த மிகவும் துன்­ப­மா­ன­தொரு நிலை­யாகும்.
அதே­நேரம் தற்­போது ஒரு சில வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்த நாம் தயக்கம் காட்­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அது தவ­றா­ன­தொன்­றாகும்.
ஆசி­யாவில் புகழ்­பெற்ற யாழ்.நூலகம் எரிக்­கப்­பட்­ட ­போது சென்­சோனிக் ஆணைக்­குழு விசா­ர­ணை­களை மேற்­கொண்­டது. அதன் முன்­னி­லையில் நூலக எரிப்பானது ஒரு கலாசார இனவழிப்பு எனப் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தோம்.
ஆகவே வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு நானோ அல்லது என் சார்ந்த வட மாகாணசபையோ தயங்கவில்லை. ஆனால் பொருத்தமான நேரங்களில் பயன்படுத்தப்படவேண்டும் என்றே கருதுகின்றோம்.
மேலும் யார் எல்லாம் எமக்காகவும் எமது மண்ணுக்காகவும் அர்ப்பணிப்புச் செய்து பணியாற்றினார்களோ அவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் கடமை எமது மாகாண சபைக்குள்ளது. அக்கடமையை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXht7.html
இராணுவத்தின் தலைமைத்துவப் பயிற்சியில் மாணவியுடன் சிப்பாய் தவறாக நடக்க முயற்சி?
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 03:31.59 PM GMT ]
இராணுவத்தின் தலைமைத்துவப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவியொருவரிடம் படைச்சிப்பாய் தப்பாக நடந்து கொள்ள முயற்சித்தமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் கடந்த செப்டம்பரில் நடைபெற்றிருந்த போதும் இதுவரை காலமும் இராணுவத்தினரால் மூடி மறைக்கப்பட்டிருந்ததாக சிங்கள ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
கடந்த செப்டெம்பர் மாதம் கண்டி கண்ணொருவை இராணுவ முகாமில் பயிற்சியில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவியொருவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த மாணவி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் ஜன்னல் ஊடாக செலுத்தப்பட்ட கையொன்று அவரை தப்பான முறையில் ஸ்பரிசிக்க முயன்றுள்ளது.
மாணவி திடுக்கிட்டு எழுந்து கூக்குரலிட்டபோது குறித்த மர்ம நபர் தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முகாமிலுள்ள இராணுவப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் சந்தேக நபர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை.  இந்நிலையில் குறித்த மாணவி தூங்கிக் கொண்டிருந்த ஜன்னல் அருகே சேற்றுக் கால் தடங்கள் இருப்பதை கவனித்த இராணுவப் பொலிசார் அதனை வைத்து விசாரணைகளை மேற்கொண்டபோது கோப்ரல்தர படைச்சிப்பாய் ஒருவர் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும் இந்தச்சம்பவம் இதுவரை காலமும் இராணுவம் மற்றும் உயர்கல்வி அமைச்சினால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. தற்போது சிங்கள ஊடகங்களில் இந்தச் செய்தி குறித்த தகவல்கள் பரபரப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தி தொடர்பாக கொழும்பு டுடே செய்திச் சேவை இராணுவ ஊடக மையத்தின் பணிப்பாளர் ஜயநாத் ஜயசேனவை தொடர்பு கொண்ட போது இது ஒரு சாதாரண விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த படைச்சிப்பாய் தண்டனையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXht6.html

Geen opmerkingen:

Een reactie posten