தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 november 2014

எஞ்­சி­யி­ருப்­ப­வர்­க­ளா­வது நிம்­ம­தி­யாக வாழ வழிசெய்ய வேண்டும்

ஜனாதிபதிக்கான செலவு 103 கோடி ரூபாவால் அதிகரிப்பு: ஐ.தே.க குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 01:39.35 PM GMT ]
நாட்டில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளை புறந்தள்ளி இருப்பது அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவத்திற்கு ஒதுக்கியுள்ள நிதி எடுத்துக் காட்டுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஆசியாவில் அதிகளவில் காலநிலை இடர்பாடுகளை சந்திக்கும் இலங்கையின் இடர் முகாமைத்துவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கவனத்தில் கொள்ளும் போது அரசாங்கம் அப்படியான அனர்த்த நிலைமையை புறந்தள்ளி உள்ளதை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி எடுத்துக்காட்டுகிறது.
சுகாதாரத்திற்காக வருடாந்தம் 13 ஆயிரத்து 909 கோடி ரூபா ஒதுக்கப்படுகிறது. இந்த பணத்தை இரண்டு கோடி மக்கள் தொகைக்கு வகுக்கும் போது ஒரு நபரின் சுகாதாரத்திற்காக வருடாந்தம் 5 ஆயிரத்து 850 கோடி ரூபாவே ஒதுக்கப்படுகிறது.
இந்த நிதியானது ஜனாதிபதி 20 நிமிட செலவுக்கு ஈடானது. அத்துடன் வெள்ளம், நிலச்சரி இடர்களுக்காக 314 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தானங்களை வழங்க விமானங்களிலும் தரை மார்க்கமாகவும் செல்ல ஒதுக்கப்பட்டுள்ள நிதி இதனை விட மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறையை விட இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான செலவு 103 கோடி ரூபாவால் அதிகரித்துள்ளது.
ராஜபக்ஷவினரின் பொறுப்பில் இல்லாத பல அமைச்சுகளுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டப்பட்டுள்ளது.
முழு நாட்டுக்கும் உணவை வழங்கும் அமைச்சுக்கு முழு வருடத்திற்கும் 4 ஆயிரத்து 211 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXixy.html
எஞ்­சி­யி­ருப்­ப­வர்­க­ளா­வது நிம்­ம­தி­யாக வாழ வழிசெய்ய வேண்டும்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 02:09.13 PM GMT ]
இயற்­கையின் பேர­ழி­வுகள் மிகக் கொடூ­ர­மா­னவை. அதன் சுவ­டுகள் வாழ்நாள் முழு­வதும் பாதிப்­புற்­ற­வர்­களை துன்­பத்­திலும் துய­ரத்­திலும் ஆழ்த்தி சதா நிம்­ம­தியை சீர்­கு­லைக்கும். இதி­லி­ருந்து மீள்­வ­தென்­பது அவ்­வ­ளவு சுல­ப­மா­ன­தல்ல.
இதர மக்­க­ளி­னதும் அர­சாங்­கத்­தி­னதும் விரை­வான நட­வ­டிக்­கை­களின் மூலமே பாதிக்­கப்­பட்ட மக்­களை அதி­லி­ருந்து ஓர­ளவு மீட்­டெ­டுக்க முடியும்.
சொந்த பந்­தங்­க­ளுடன் நிம்­ம­தி­யாக வாழ்ந்த மக்கள் ஒரு கனப் பொழுதில் அனைத்­தையும் இழந்து அநா­தை­க­ளாகி விடு­கின்­றனர். இதுவே இயற்கை அனர்த்­தத்தின் கோர முக­மாகும்.
கொஸ்­லந்தை மீரி­ய­பெத்த தோட்­டத்தில் கடந்த 29ம் திகதி புதன்­கி­ழமை இடம்­பெற்ற பாரிய மண்­ச­ரிவினால் ஏற்­பட்ட மனித பேர­வலம் காரணமாக மலை­யகம் எங்கும் சோகத்தில் மூழ்­கி­யுள்­ளது.
பாட­சா­லைக்கு சென்ற சிறு­வர்­களும், அதி­கா­லையில் தொழி­லுக்­காக வீட்­டை­விட்டுச் சென்­ற­வர்­க­ளுமே உயிர் தப்­பி­யுள்­ளனர்.
வயோ­தி­பர்கள், பெண்கள், குழந்­தைகள் என வீட்­டி­லி­ருந்த பலரும் மிகப் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.
இயற்­கையின் இந்தக் கோரதாண்­டவம் கார­ண­மாக சுமார் 300 பேர் காணாமல் போயி­ருக்­கலாம் அல்­லது மண்ணுள் புதை­யுண்டு போயி­ருக்­கலாம் என்று கூறப்­படுகின்றது.
எனினும், கணக்­கெ­டுப்­புக்­க­ளின்­படி 192 பேர் காணாமல் போயுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.
அதே­வேளை, 58 குடும்­பங்­களை சேர்ந்த 75 பிள்­ளைகள் பாட­சாலை சென்ற கார­ணத்­தினால் உயிர் தப்­பி­யுள்­ளனர்.
இத­னி­டையே மீட்புப் பணி­களில் ­ப­டை­யி­னரும் பொது­மக்­களும் ஈடு­பட்ட போதிலும், மண்ணில் புதை­யுண்­ட­வர்­களை உயி­ருடன் மீட்க முடி­யாது போயுள்­ளது.
சீரற்ற கால­நிலை மற்றும் தொடர்ச்­சி­யான மழை என்­பன மீட்புப் பணி­களை முன்­னெ­டுப்­பதில் பாரிய இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.
அத்­துடன் லயன் குடி­யி­ருப்­பு­க­ளுக்கு மேலாக 35 அடி உய­ரத்­துக்கு மண் மூடி­யுள்­ளதால் அவற்றை அகற்றி தேடு­தலை மேற்­கொள்­வது கடி­ன­மான பணியா­க­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
மீரி­ய­பெத்த தோட்ட மண் சரிவு கார­ண­மாக 7 லயன் குடி­யி­ருப்­புகள், ஒரு பால் சேக­ரிப்பு நிலையம், 90 வருடம் பழைமை வாய்ந்த கோயில், 2 வர்த்­தக நிலை­யங்கள், ஒரு சன­ச­மூக நிலையம் என்­பன இருந்த இடம் தெரி­யா­மலே மண்­ணுக்குள் மறைந்து போயுள்­ள­தா­கவும், மீரியபெத்த என்ற தோட்டம் இருந்­த­மைக்­கான அடை­யா­ளமே இல்­லாமல் போயுள்­ள­தா­கவும் உயிர்தப்­பிய மக்கள் கண்ணீர் வடிக்­கின்­றனர்.
இரண்டு மலை­க­ளுக்கு நடுவில் மீரியபெத்த தோட்டம் அமைந்­துள்­ள­தா­கவும் அதில் ஒன்­றான 300 அடி உய­ர­மான மலையே இவ்­வாறு சரிந்து பாரிய அனர்த்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் இதனால் 10 ஏக்கர் நிலப்­ப­ரப்பு முற்­றாக மண்ணால் மூடப்­பட்­டுள்­ள­தா­கவும் கிரா­ம­வா­சிகள் தெரி­விக்­கின்­றனர்.
சீரற்ற கால­நிலை கார­ண­மாக மழை தொடர்ந்து பெய்­யு­மி­டத்து மலை­ய­கத்தின் இதர பிர­தே­சங்­க­ளிலும் இத்தகைய மண்சரிவு அபாயம் ஏற்­ப­டு­மென எச்­ச­ரிக்கை விடப்­பட்­டுள்­ளது.
குறிப்­பாக பதுளை, நுவ­ரெ­லியா, கண்டி, மாத்­தளை, கேகாலை, இரத்­தி­ன­புரி ஆகிய சகல பிர­தே­சங்­க­ளிலும் மண்சரிவு அபாயம் இருப்­பதால் மக்­களை எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறு கேட்கப்பட்டுள்ளனர்.
கொஸ்­லந்த, மீரியபெத்த பகு­தியில் மண்சரிவு அபாயம் தொடர்பில் 2005ம் ஆண்டு எச்­ச­ரிக்கை விடப்பட்ட­ போதிலும் அது தொடர்பில் அர­சாங்­கமோ அன்றேல் தோட்ட நிர்­வா­கமோ எந்­த­வி­த­மான அக்­க­றையும் செலுத்­த­வில்லை என்று குற்­றச்­சாட்­டுக்கள் கூறப்­பட்டு வரு­கின்­றன.
இதனிடையே, மீண்டும் அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் 2011ம் ஆண்டு இப்­பிர­தே­சத்தில் மண்சரிவு அபாயம் இருப்­ப­தாக எச்­ச­ரிக்கை விடுத்­திருந்தது. அதனைத் தொடர்ந்து 75 லயன் அறை­களை மாற்­று­வ­தற்­கான காணிகள் தெரிவு செய்­யப்­பட்டு 30 வீடுகள் நிர்­மா­ணிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இருப்­பினும் அவை முழு­மை­யாக நிர்­மா­ணிக்­கப்­ப­டாது கைவி­டப்­பட்­டு ­விட்­டன.
அத்­துடன் அதி­கா­ரி­களும் சரி, மண்­ச­ரிவு அபாயம் நில­விய பிர­தேங்­களில் வசித்த மக்­களும் சரி காலப்­போக்கில் இந்த எச்­ச­ரிக்­கைளை மறந்துவிட்­டனர்.
புதிய வீடு­களும் அரை­கு­றை­யாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு கைவி­டப்­பட்ட நிலையில் காணப்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
பொது­வா­கவே அடை­மழை பெய்ய ஆரம்­பித்­ததும் எழுந்­த­மா­ன­மாக மண்­ச­ரிவு அபாயம் குறித்தும் வெள்ள அபாயம் குறித்தும் எச்­ச­ரிக்கை விடப்­ப­டு­வ­துண்டு.
அதே­வேளை, மண்­ச­ரிவு அபாயமுள்ள இடங்களை தொழில்நுட்ப ரீதி­யாகக் கண்­ட­றிந்து மக்­களை பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்த இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பதே அவர்­களால் முன்­வைக்­கப்­பட்ட கார­ணங்­க­ளாகும்.
பொது­வா­கவே வளர்ச்­சி­ய­டைந்த நாடு­க ளில் இயற்கை அனர்த்­தங்கள் குறித்து மக்­க­ ளுக்கு முன் கூட்­டியே அறி­விக்­கப்­பட்டு பாது காப்­பான இடங்­க­ளுக்கு மக்கள் அனுப்பி வைக்­கப்­ப­டு­வ­துண்டு. அது மாத்­தி­ர­மன்றி, இயற்கை அனர்த்­தங்கள் ஏற்­படக்கூடும் என்ற இடங்­களில் குடி­யி­ருப்­புக்­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு அனு­மதி அளிக்­கப்­ப­டு­வதும் கிடை­யாது.
அவ்­வாறு வீடுகள் அமைந்­தி­ருந்தால் கூட அவை உட­ன­டி­யாக அகற்­றப்­பட்டு பாது­காப்­பான இடங்­களில் புதிய குடி­யி­ருப்­புக்கள் அமைத்துக் கொடுக்­கப்­பட்டு விடும். எனினும், அந்த வகை­யான துரித நட­வ­டிக்­கைகள் எதுவும் இல்­லா­தி­ருப்­பதே இயற்கை அனர்த்­தங்­களின் போது பெரும் எண்­ணிக்­கை­யான மக்கள் அநி­யா­ய­மாகப் பலி­யாகக் கார­ண­மாகி விடு­கி­றது.
அந்­த­வ­கையில் மீரி­ய­பெத்த அனர்த்தம் நிக­ழாமல் தடுத்­தி­ருக்கப் போது­மா­ன­ளவு கால அவ­காசம் இருந்­த­மையை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் ஏற்­றுக்­கொண்டேயாக வேண்டும்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திக­தியை இந்­நாட்டு மக்கள் என்ன, உல­கமே மறந்­தி­ருக்க மாட்­டார்கள். கிறிஸ்மஸ் பண்­டி­கையை மிகுந்த மகிழ்ச்­சி­யோடு கொண்­டா­டிய மக்­க­ளுக்கு மறுநாள் பேர­திர்ச்சி காத்­தி­ருந்­தது.
சுனாமி பேர­லை­யினால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் கண்­ணி­மைக்கும் நேரத்தில் மடிந்­தார்கள். அதே போன்­றதோர் அனர்த்­தத்­தையே மீரி­ய­பெத்த தோட்ட மக்­களும் எதிர்­நோக்­கினர்.
எவ்­வா­றெ­னினும், சுனாமி அனர்த்­தத்தைத் தொடர்ந்து இயற்கை அனர்த்­தங்­க­ளுக்கு எவ்­வாறு முகம் கொடுப்­பது? அவற்­றி­லி­ருந்து எவ்­வாறு பாது­காப்பைத் தேடிக் கொள்­வது என்­றெல்லாம் பேசப்­பட்­டது.
இறு­தியில் அதுவும் காலப்­போக்கில் மறந்து போன அத்­தி­யா­ய­மா­கவே கைவி­டப்­பட்­டது. இது தொடர்பில் தேசிய ரீதியில் சிந்­தித்து இயற்கை அனர்த்­தங்­க­ளி­லி­ருந்து பாது­காப்பு பெறு­வ­தற்­கா­னதோர் பொறி­மு­றையை வகுத்­தி­ருந்தால் கூட இவற்றை ஓர­ளவு குறைத்­தி­ருக்க முடியும்.
ஒரு­வ­கையில் இயற்கை அனர்த்­தங்கள், எதிர்வு கூறல்­க­ளுக்கு அப்­பாற்­பட்ட சக்தி மிக்­கவை என்ற கார­ணத்­தினால் அதனை எதிர்­கொள்­வது கஷ்­ட­மான காரி­ய­மா­கவே இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.
இருந்த போதிலும் நவீன விஞ்­ஞானத் தொழில் நுட்­பங்­களைப் பயன்­ப­டுத்தி அவற்றை முன்­கூட்­டியே அறியும் மார்க்­கங்­களைக் கண்டு பிடிப்­பதும் அது குறித்து மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களின் கட­மை­யாகும். அத­னையே வளர்ச்­சி­ய­டைந்த ஐரோப்­பிய நாடுகள் பலவும் கையாண்டு வரு­கின்­றன.
உலகின் பல்­வேறு இடங்­க­ளிலும் குறிப்­பாக ஜப்பான், பிலிப் பைன்ஸ், இந்­தோ­னே­ஷியா, நியூ­ஸி­லாந்து ஆகிய நாடு­களில் அடிக்­கடி எரி­மலை வெடிப்­புக்கள் ஏற்­ப­டு­வ­துடன் பெரு­ம­ளவு சாம்­பரும் புகையும் கக்­கப்­பட்டு குறித்த சூழல் பெரும் பாதிப்­புக்­க­ளுக்கு ஆளா­கின்­றது.
இருந்த போதிலும் மக்கள் முன்­கூட்­டியே எச்­ச­ரிக்­கப்­பட்டு பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். அவ்­வா­றான உபா­ய­மொன்­றைக் ­கை­யாள வேண்­டிய அவ­சியம் குறித்து சிந்­திப்­பது இன்­றி­ய­மை­யா­தது.
இலங்­கையில் சுனா­மியை தொடர்ந்து ஏற்­பட்ட மற்­று­மொரு இயற்கை பேர­வலம் இது என்­பதால் எதிர்­வரும் காலங்­களில் இவ்­வா­றான அவ­லங்கள் நாட்டில் எந்தப் பகு­தி­யிலும் ஏற்­ப­டா­தி­ருக்ககூடிய வகையில் முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் இருப்­பது அவ­சி­ய­மாகும்.
இதே­வேளை, மண் சரிவால் உற்றார் உற­வி­னர்­களை இழந்து பாதிக்­கப்­பட்ட நிலையில் உயிர் தப்­பி­யுள்ள மக்­க­ளுக்கு என்ன செய்ய வேண்­டு­மென்­பதே அடுத்து எழும் கேள்­வி­யாகும்.
அவர்­களை பொறுத்­த­மட்டில் அர­சாங்கம், அரசு சாரா சமூக நிறு­வ­னங்கள் நிவா­ரண உத­வி­களை வழங்கி வரு­கின்­றன. இவை உட­னடி உத­வி­க­ளே­யா கும். இதன் மூலம் குறித்த மக்­களின் நிரந்­தரப் பிரச்­சி­னைக்குத் தீர்வு கிட்டப் போவ­தில்லை.
அந்த வகையில் எஞ்­சி­யுள்­ள­வர்­க­ளா­வது நிம்­ம­தி­யாக வாழும் சூழலை உரு­வாக்க சகல தரப்பினரும் தம்மாலான பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும்.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்தை, மீரிய பெத்த தோட்ட மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடங்களை கட்டிக்கொடுக்க தோட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
மேலும், தோட்ட மக்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்குவதாக அமெரிக்காவும் இந்தியாவும் உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனை உரிய முறையில் பயன்படுத்தி மண் சரிவால் பாதிக்கப்பட்டு உயிருடன் எஞ்சியிருப்பவர்களாவது அச்சமின்றி நிம்மதியாக வாழ வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும்.
அதேபோன்று மலையகத்தில் மண்சரிவு அபாயமுள்ள இதர பிரதேசங்களையும் இனங்கண்டு அச்சூழலில் வாழும் மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமாகும்.
இது தொடர்பில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் ஒருமுகமாக செயற்படுவது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXixz.html

Geen opmerkingen:

Een reactie posten