தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 oktober 2014

மகிந்தவின் யாழ்.வருகை! இரவிரவாக வர்ணம் பூசி பணம் வசூலிக்கும் இராணுவம்!

அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பேச்சு நடத்த போகும் கூட்டமைப்பு மற்றும் மு.கா
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 06:54.46 AM GMT ]
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகளின் அடிப்படை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் எப்படியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து தீர்மானிக்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற அமர்வுகளின் போது இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக பேசப்படுகிறது.
தேசிய பிரச்சினை, தற்போதை அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தை கல்முனையில் நடத்தப்படவிருந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுகவீனமடைந்ததன் காரணமாக பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlt3.html
மகிந்தவின் யாழ்.வருகை! இரவிரவாக வர்ணம் பூசி பணம் வசூலிக்கும் இராணுவம்
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 07:03.37 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் யாழ். வருகையை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு இராணுவத்தினர் இரவிரவாக வர்ணம் பூசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு வர்ணம் பூசும் இராணுவத்தினர், வலுக்கட்டாயமாக அதற்கான பணத்தை தங்களிடம் வசூலிப்பதாக வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 12ம் திகதி வடக்குக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, வடமராட்சிப் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
அதனை முன்னிட்டு, நெல்லியடி நகரத்தை அண்மித்த பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களுக்கு முன்னால் இராணுவத்தினர் நீல நிற வர்ணத்தினை இரவிரவாக தீட்டியுள்ளனர்.
இதற்கென ஒவ்வொரு வியாபார நிலையங்களினதும் உரிமையாளர்களிடமிருந்து தலா ஆயிரம் ரூபா அறவிட்டுள்ளனர்.
சில வர்த்தகர்கள் குறித்த பணத்தை வழங்கிய போதும், சிலர் மறுப்புத் தெரிவித்து விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், நெல்லியடிப் பொலிஸாரின் தலையீட்டை அடுத்து பணம் அறவிடும் முயற்சி கைவிடப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlt4.html

Geen opmerkingen:

Een reactie posten