தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

கொச்சிக்கடையில் தமிழ்ப் பெண் மர்ம மரணம்: பரபரப்பு தகவல்!

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்தில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் பெண், கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைகளின் மூலம் அப்பெண் கொலை செய்யப்பட்டமை உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 
கடந்த செப்ரெம்பர் 27ம் திகதி நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்தில் வடக்கு கட்டான, கோல்டன் கேட் தோட்டத்தைச் சேர்ந்த கோவில்பிள்ளை குமாரவதி (40 வயது) எனும் தமிழ்ப் பெண்ண சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த பெண் மரணமடைந்து நான்கு நாட்கள் கழித்து அழுகிய நிலையில் கிடந்த சடலத்தையே மீட்ட நீர்கொழும்பு பொலிஸார், அதனை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்திருந்தனர்.
சடலத்தை பிரேத பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.என்.ருஹுல் ஹக், தனது அறிக்கையில் உயிரிழந்தவரின் அடிவயிற்றில் மூன்று ஆழமான கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டன என்றும் இதனால் அதிக இரத்தப் பெருக்கு ஏற்பட்டு மரணம் சம்பவித்தது எனவும் ஊர்ஜிதப்படுத்தினார்.
எனினும் இந்த மர்ம மரணம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVft3.html

Geen opmerkingen:

Een reactie posten