தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 oktober 2014

இந்தியா வருமாறு அழைப்பு! போவது குறித்து தீர்மானிக்கவில்லை!- சீ.வி விக்னேஸ்வரன்

சிங்கப்பூரிலிருந்து கொழும்பு நோக்கி வந்த விமானத்தில் இலங்கையர் ஒருவர் திடீர் மரணம்
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 08:47.11 AM GMT ]
சிங்கப்பூரில் இருந்து இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையரொருவர், திடீரென அவ்விமானத்தினுள் மரணத்தைத் தழுவிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
பொல்காவலையைச் சேர்ந்த 57 வயது நபரொருவரே இன்று அதிகாலை 1.35 மணியளவில் திடீரென சுகயீனமுற்ற நிலையில் இவ்வாறு  விமானத்தினுள் மரணமாகியுள்ளார்.
பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWet1.html
இந்தியா வருமாறு அழைப்பு! போவது குறித்து தீர்மானிக்கவில்லை!- சீ.வி விக்னேஸ்வரன்
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 10:50.48 AM GMT ]
வடக்கு மாகாண முதலமைச்சரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியா செல்வது குறித்து இன்னும் தீர்மானிக்வில்லை என்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறவுள்ள சொற்பொழிவு ஒன்றிற்கு வருமாறு மனித உரிமை அமைப்பு கடந்தவாரம் அழைப்பு விடுத்துள்ளது. 
எனினும் இந்தியா செல்வது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குழு இந்தியா சென்றதுடன், பல்வேறு தரப்பினரையும் சந்தித்து இருந்தததுடன் பிரதமர் மோடியையும் சந்தித்து இருந்தனர்.
இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனைச் சந்திக்க மோடி விருப்பம் தெரிவித்திருந்தார்.
எனவே விரைவில் இருவரது சந்திப்பும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszARWKWet2.html

Geen opmerkingen:

Een reactie posten