தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 oktober 2014

மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்: அரசாங்கம்

நல்லிணக்க உணர்வுக்கு இந்து சமூகத்தின் ஆர்வமும் செயல்திறனும் பங்கு சேர்க்கும்: ஜனாதிபதி மஹிந்த
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 04:28.05 AM GMT ]
சந்திரப் பஞ்சாங்கத்தின்படி இந்து புதுவருடத்தின் ஆரம்பத்தைக் குறித்து நிற்கும் இந்து சமூகத்தின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
தீபத்திருநாள் அல்லது தீபாவளிப் பண்டிகை தீயவற்றை நீக்கி நன்மையையும், அறியாமையையும் நீக்கி அறிவுடமையையும் இருளை நீக்கி ஒளியையும் வெற்றிகொள்வதைக் குறித்து நிற்கிறது.
வழிபாடுகள் ஆன்மீக வணக்கங்கள் மூலம் இலங்கை வாழ் இந்துக்கள் இந்த விசேட பண்டிகையைக் கொண்டாடுவதில் உலகெங்கிலுமுள்ள இந்து மக்களுடன் இணைந்து கொள்கின்றனர்.
அறியாமையிலிருந்து எழும் தீயவற்றை வெற்றிகொள்வதற்கு அறிவுடமையையும் புரிந்துணர்வையும் அடைந்து கொண்டமைக்காக தெய்வங்களுக்கு தங்களது நன்றியை வெளிப்படுத்துமுகமாக இந்துக்கள் இன்றைய தினம் கோயில்களில் விளக்கேற்றி வீடுகளை விளக்குகளால் அலங்கரிக்கின்றனர்.
இந்து சமயத்தின் உயர்ந்த ஆன்மீகப் பெறுமானங்களை வெளிப்படுத்தி நிற்கும் அன்பு மற்றும் அர்ப்பண உணர்வு நிறைந்த இந்த தீபத்திருநாள் உயர்ந்த ஆன்மீகப் பெறுமானங்களை வளர்த்துக் கொள்வதற்கும் சமூகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும் மக்களுக்கு மத்தியில் சுபீட்சத்தையும் ஐக்கியத்தையும் அதிகரித்துக்கொள்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாகும்.
தீபாவளி பண்டிகையின் போதான சமய நடைமுறைகள் மற்றும் கொண்டாடங்கள் நாட்டில் தற்போது நிலவுகின்ற நல்லிணக்க உணர்வுக்கு இந்து சமூகத்தின் ஆர்வமும் செயல்திறனும் வாய்ந்த பங்குபற்றுகை மேலும் பெறுமதி சேர்ப்பதாக அமையும்.
இத்தீபத்திருநாள் இந்து சமயப் போதனைகளைப் பின்பற்றும் எல்லோர் மத்தியிலும் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் புரிந்துணர்வையும் கொண்டுவர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWesy.html
மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்: அரசாங்கம்
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 05:47.42 AM GMT ]
மாளிகாவத்தையில் உள்ள மீன்பிடித்துறை அமைச்சின் முன்னாள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது மீனவர்கள் மீது கல்லெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இழுவைப்படகு உரிமையாளர் கடலில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இதன்போது அமைச்சு அலுவலகத்தில் இருந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் தம்மில் மூவர் காயமடைந்ததாகவும் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தநிலையில் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் அரசாங்கத்துக்கும் தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை பயன்படுத்தி மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத் குணவர்த்தன போன்றோர் மீனவர்களுக்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதேவேளை ராஜித ஐக்கிய தேசியக்கட்சியில் இணையப்போகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அரசாங்கம் மீனவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
http://www.tamilwin.com/show-RUmszARWKWesz.html

Geen opmerkingen:

Een reactie posten