தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

ஜெயக்குமாரியைக் விடுவிக்கக் கோரி வவுனியாவில் போராட்டம்!

தென்கொரியாவிற்கு சென்றிருந்த விளையாட்டு வீரர்கள் இருவர் மாயம்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 09:44.29 AM GMT ]
தென் கொரியாவுக்கு 7வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக சென்றிருந்த இலங்கை அணியின் வீரர்களில் இருவர் நாடு திரும்பவில்லை என்று தகவல் தெரிவிக்கின்றன.
ஹொக்கி அணியின் பிரசன்ன திசநாயக்க மற்றும் கடற்கரை கரப்பந்து வீரர் ஆகியோரையே காணவில்லை என்றும் அவர்கள் தென்கொரியாவிலேயே தலைமறைவாகியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் காணாமல் போன கடற்கரை கரப்பந்து வீரரை உடனடியாக அடையாளம் காணமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnx6.html
ஜெயக்குமாரியைக் விடுவிக்கக் கோரி வவுனியாவில் போராட்டம்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 09:53.01 AM GMT ]
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் எதிர்வரும் 10ஆம் திகதி வவுனியா நீதிமன்றம் முன்பாக அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளனர் என்று வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவைச் சேர்ந்த கி.தேவராசா தெரிவிக்கையில்,
கிளிநொச்சி தர்மபுரப்பகுதியில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பிரயோகித்து ஜெயக்குமாரிக்கும் விடுதலை புலிகளுக்கும் தொடர்பு உண்டு என்பதை வலியுறுத்தி இராணுவத்தினரால் கைது செய்பட்ட ஜெயக்குமாரி 200 நாட்களுக்கு மேலான நிலையில் இன்னமும் விடுதலை சைய்யப்படவில்லை.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 10 திகதி காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள சகல பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், கல்விச்சமூகத்தினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை சார்ந்தோர், ஊடகவியலாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைந்து குரல் கொடுக்குமாறு கோருகிறோம்என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnx7.html

Geen opmerkingen:

Een reactie posten