தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

பொதுபல சேனாவின் பிரித்தாளும் சூழ்ச்சி!

கொழும்பு சுகத­தாஸ உள்­ள­ரங்கில், கடந்த 27ஆம் திகதி பொது­பல சேனா நடத்­திய மாநாடு, சர்­வ­தேச அள­விலும், உள்­நாட்­டிலும், கரி­ச­னை­க­ளையும், கவ­லை­க­ளையும் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது. இந்த மாநாட்டின் அடிப்­படை நோக்கம் குறித்து ஏற்­க­னவே சில சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்­டி­ருந்­தன.
அந்தச் சந்­தே­கங்கள் எந்­த­ள­வுக்கு உண்­மை­யா­னவை என்­பதை விட, இந்த மாநாட்டில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களும், அதில் நிகழ்த்­தப்­பட்ட உரை­களும், மியன்­மாரின் அசின் விராது தேரரின் பங்­கேற்­பும்தான் கூடுதல் கவ­னத்தைப் பெற்­றி­ருந்­தன.
பொது­பல சேனா இந்த மாநாட்டை ஏற்­பாடு செய்த போதே, அதற்குப் பல்­வேறு எதிர்ப்­பு­களும், விமர்­ச­னங்­களும் கிளம்­பி­யி­ருந்­தன.
சிங்­கள பௌத்த ஆட்­சியை ஏற்­ப­டுத்தல் என்ற இலக்­கினை முன்­வைத்த இந்த மாநாடு, பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ­பக்rவை ஜனா­தி­ப­தி­யாக முன்­னி­லைப்­ப­டுத்தும் முயற்சி என்று கூட விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.
ஆனால், இந்த மாநாட்டில் அதற்­கு­ரிய வெளிப்­ப­டை­யான எந்த முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. ஆனால், நாட்டில் சிங்­கள பௌத்த ஆட்­சியை ஏற்­ப­டுத்­தலும், நாட்டை சிங்­கள பௌத்த மயப்­ப­டுத்­து­வ­துமே இந்த மாநாட்டின் இலக்­குகள் என்­பது தெளி­வா­கவே கூறப்­பட்­டுள்­ளது.
இது பல்­லின, பல மதங்கள் வாழும் நாடு அல்ல என்றும், சிங்­கள பௌத்த நாடு என்றும், இந்த மாநாட்டில் வலி­யு­றுத்­தப்­பட்­டது.
மேலும், இங்­குள்ள மக்­களை, இந்­துக்கள், முஸ்­லிம்கள், கிறிஸ்­த­வர்கள் என்று அழைக்கக் கூடாது என்றும், சிங்­கள இந்­துக்கள், சிங்­கள கிறிஸ்­த­வர்கள், சிங்­கள, முஸ்­லிம்கள் என்றே அழைக்­கப்­பட வேண்டும் என்றும் பொது­பல சேனா மாநாட்டில் வலி­யு­றுத்­தப்­பட்­டது.
இதி­லி­ருந்து, இந்த மாநாடு பௌத்த மதத்தை பாது­காப்­ப­தற்­கா­னது என்ற போர்­வையில், சிங்­கள இனத்தைப் பாது­காப்­பதை மட்­டுமே இலக்­காக கொண்­டது என்­பதைப் புரிந்து கொள்ள முடிந்­தது.
இந்த மாநாட்­டிலும் சரி, பின்னர், பொது­பல சேனா­வுக்கும் மியன்­மாரின் 969 அமைப்­புக்கும் இடையில் உடன்­பாடு செய்து கொள்­ளப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பிலும் சரி, தாம் எந்­த­வொரு இனத்­துக்கோ மதத்­துக்கோ எதி­ரா­ன­வர்கள் அல்ல என்று இரு அமைப்­பு­க­ளுமே கூறி­யி­ருந்­தன.
மத தீவி­ர­வா­தத்­தையே தாம் எதிர்ப்­ப­தாகக் கூறிய இந்த பொது­பல சேனாவும், 969 அமைப்­புமே, பௌத்த மத அடிப்­ப­டை­வா­தி­க­ளாக வெளி­யு­ல­கினால் பார்க்­கப்­ப­டு­கின்­றன.
இந்த பௌத்த அடிப்­ப­டை­வா­தமே, தெற்­கா­சி­யாவின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுக்கும் என்று உலக வல்­ல­ரசு நாடு­களே கவலை கொண்­டி­ருக்­கின்ற நிலையில், இந்த அமைப்­புகள் தாமே மத தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ராகப் போராடப் போவ­தாக அறி­வித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
ஏற்­க­னவே பொது­பல சேனா இலங்­கை­யிலும், 969 அமைப்பு மியன்­மா­ரிலும், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களைத் தூண்­டி­விட்டு வரு­கின்­றன.
பொது­பல சேனாவைப் பொறுத்­த­வ­ரையில், முஸ்­லிம்கள் மட்­டு­மன்றி, கிறிஸ்­த­வர்­க­ளையும் இலக்கு வைத்து செயற்­ப­டு­கி­றது.
பௌத்த மதத்தைப் பாது­காப்­பது என்ற போர்­வையில், பிற மதங்­களை அழிக்க முனை­கி­றது. அது­மட்­டு­மன்றி, இன­ரீ­தி­யா­கவும், பிற இனங்­களை அடக்­கி­யாள முனை­கி­றது.
மியன்­மாரைப் பொறுத்­த­வ­ரையில் அங்கு ரொகிங்யா எனப்­படும் சிறு­பான்மை முஸ்­லிம்­களை 969 அமைப்பு இனப்­ப­டு­கொலை செய்து வரு­கி­றது, அதுவும், பௌத்த மதத்தின் பேரால் நடக்­கி­றது. இதற்கு எதி­ராக தலாய்­லாமா போன்ற பௌத்த மதத்தின் பெருந்­த­லை­வர்கள் பல­ருமே குரல் கொடுத்­தி­ருக்­கி­றார்கள்.
ஆனால், இலங்­கையில் இருந்­துதான், அதற்கு ஆத­ர­வ­ளிக்­கப்­பட்­டுள்­ளது.
பொது­பல சேனாவின் மாநாட்­டு க்கு, மியன்­மாரின் தீவி­ர­வாதப் பிக்கு என்றும், மியன்­மாரின் பின்­லேடன் என்றும் அழைக்­கப்­படும், அசின் விராது தேரர் அழைக்­கப்­பட்டுக் கௌர­விக்­கப்­பட்­டுள்ளார்.
அது­மட்­டு­மன்றி, அவ­ருடன் பொது­பல சேனா உடன்­பாடும் செய்து கொண்­டி­ருக்­கி­றது. இவற்­றுக்­கெல்லாம் அர­சாங்­கத்தின் ஆத­ரவும் இருக்­கி­றது.
பொது பல சேனா­வுடன் இணைந்து செயற்­படப் போவ­தாக அறி­வித்த விராது தேரர், இன்­னொன்­றையும் கூறி­யி­ருந்தார். பௌத்த மதத்தைப் பாது­காக்க நான் எதையும் செய்வேன் என்­பதே அது­வாகும்.
அதா­வது, பௌத்­தத்தின் பேரால், இனப்­ப­டு­கொ­லை­க­ளையும் செய்யத் துணிந்­த­வர்தான் விராது தேரர் என்ற குற்­றச்­சாட்டு உல­க­ளா­விய ரீதியில் எதி­ரொ­லிக்­கின்ற நிலையில், அவ­ரது இந்தக் கருத்து ஆச்­ச­ரி­ய­மா­ன­தல்ல.
அது­போல்தான், பொது­பல சேனாவும் இலங்­கையில் பௌத்தம், சிங்­களம் இந்த இரண்­டையும் பாது­காக்க எதையும் செய்வோம் என்று சூளு­ரைக்­கி­றது.
போருக்குப் பின்னர், பொது­பல சேனாவின் எழுச்சி இலங்­கையில் இன, மத ஒற்­று­மைக்குப் பெரும் சவா­லாக மாறி­யி­ருக்­கி­றது. தமது சிங்­கள, பௌத்த கடும் போக்­கு­வா­தத்தை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும், சிங்­கள, பௌத்த மேலா­திக்­கத்தை நிலை­நாட்­டு­வ­தற்­கா­கவும், பொது­பல சேனா ஏனைய மதங்­களைப் பின்­பற்­று­வோரை நசுக்க முனை­கி­றது.
இதுவே இன்று இலங்­கையில் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்குப் பெரும் இடை­யூ­றாக மாறியும் இருக்­கி­றது. பொது­பல சேனா மாநாட்டில், தம்­முடன் இணைந்து கொள்­ளு­மாறு இந்­துக்­க­ளுக்கு விடுக்­கப்­பட்ட அழைப்பு, சிறு­பான்­மை­யி­னங்­களைப் பிரித்­தாளும் தந்­தி­ரத்தைக் கொண்­டது.
பொது­பல சேனா, வெளிப்­ப­டை­யாக இந்­துக்­க­ளுக்கு எதி­ரான கொள்­கை­களை இது­வரை வெளிப்­ப­டுத்­த­வில்லை.
அதற்கு, இந்து சமய வேரில் இருந்தே பௌத்தம் தோன்­றி­யது என்ற அடிப்­படைக் கார­ணமா? அல்­லது, இந்­துக்­க­ளுக்கு எதி­ரான போராட்­டங்கள், இந்­தி­யாவில் கடும் எதிர்ப்பை ஏற்­ப­டுத்தும் என்ற கார­ணமா? அல்­லது, இந்­துக்­களை ஏனைய சிறு­பான்­மை­யி­ன­ரிடம் இருந்து பிரித்­தாளும் தந்­தி­ரமா? என்று ஆரா­யப்­பட வேண்டும்.
பொது­வா­கவே, இது­போன்ற மேலா­திக்க கொள்கை உடை­ய­வர்கள் பிரித்­தாளும் தந்­தி­ரத்தின் ஊடாகத் தமது இலக்கை அடைய முனை­வது வழக்கம்.
இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள், இஸ்­லா­மி­யர்கள் என்று சிறு­பான்­மை­யின, மதத்­த­வர்கள் ஒன்­றாக இருக்­கும்­போது, அவர்கள் மீது அழுத்­தங்­களைக் கொடுப்­பது சிர­ம­மா­னது.
ஆனால், இந்த இனங்­க­ளையும், மதங்­க­ளையும் தனித்­த­னியே பிரித்து விட்டால், அழிப்­பது சுல­ப­மா­னது.
இந்­துக்­க­ளுடன் கைகோர்த்து, முஸ்­லிம்­க­ளையும், கிறிஸ்­த­வர்­க­ளையும், அவர்­க­ளி­டத்தில் இருந்து பிரிப்­பதன் மூலம், அவர்­க­ளுக்குள் பிரச்­சி­னை­களைத் தோற்­று­விப்­பதன் மூலம், சிங்­கள பௌத்தம் தனது பிர­தான இலக்கை அடையப் பார்க்­கி­றது.
இதன் பிர­தான இலக்கு என்­பது சிங்­கள பௌத்த தேசி­ய­வாதம் மட்­டு­மே­யாகும். மன்னார் ஆய­ருக்கு எதி­ராகத் தொடுக்­கப்­பட்ட தாக்­கு­தலும், மடுத் தேவா­லயம் குறித்து கருத்­து­களும், தமி­ழர்­க­ளான இந்­துக்­க­ளுக்கும், கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் இடையில் குரோ­தத்தை ஏற்­ப­டுத்தி விடும் எண்ணம் கொண்­டது. அது­போ­லவே, முஸ்­லிம்­க­ளுக்கும், தமி­ழர்­க­ளுக்கும் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்தி விட்டும் குளிர்­காய முனை­கி­றது பொது­பல சேனா.
இலங்­கையில் தமி­ழர்­களைப் பொறுத்­த­வ­ரையில், சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் தான், தமி­ழர்­களை அடக்கி ஒடுக்கி இன்று இரண்டாம் தரக் குடி­மக்­க­ளாக அடி­மைப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கி­றது.
இதற்­கெ­தி­ராக ஒன்­றி­ணையும், ஏனைய சிறு­பான்­மை­யின, மதப் பிரி­வு­க­ளையும், தமி­ழர்­க­ளி­டத்தில் இருந்து பிரித்து, தமது இலக்கை அடைய எத்­த­னிக்­கி­றது பொதுபல சேனா. இன்னும் வடக்கில், உள்ள மக்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­த­லாக பௌத்த, சிங்­கள மயப்­ப­டுத்­தலே இருக்­கி­றது.
தமி­ழர்கள் பாரம்­ப­ரி­ய­மாக வாழ்ந்த, வாழு­கின்ற பகு­தி­க­ளெங்கும் புதிய புதிய விகா­ரைகள் முளைக்­கின்­றன. புனித பிர­தே­சங்கள் உரு­வெ­டுக்­கின்­றன.
அதை­யொட்டி சிங்­களக் குடி­யேற்­றங்­களும் வேக­மாக வளர்ந்து வரு­கின்­றன.
இவை­யெல்லாம், வடக்கு கிழக்கைத் தமது தாயகப் பிர­தே­ச­மாக கொண்டு வாழும், அனைத்து தமிழ் பேசும் மக்­க­ளுக்கும் மிகப் பெரிய அச்­சு­றுத்­த­லாக மாறி­யி­ருக்­கி­றது.
இதற்­கெ­தி­ராக ஒன்­று­பட்டுக் குரல் கொடுக்கும் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களை – மதத்தின் பெயரால், தனித்­த­னி­யாக்கி அழிக்க முனை­கி­றது பொது­பல சேனா. பொது­பல சேனாவின் வளர்ச்சி என்­பது போருக்குப் பிந்­திய இலங்­கையின் மிகப் பெரிய அச்­சு­றுத்­த­லா­கவே மாறி­யுள்­ளது.
இந்த அச்­சு­றுத்­தலை ஆரம்­பத்­தி­லேயே கிள்ளி எறிந்­து­விட அர­சாங்­கம்தான் நடவ­டிக்கை எடுத்­தி­ருக்க வேண்டும். ஆனால், அர­சாங்­கமோ அதற்குப் பின் னால் இருந்து கொண்டு இயக்­கு­கி­றது.
இதனால், பொது­பல சேனாவின் ஆட் டம் இன்னும் இன்னும் உக்­கி­ர­ம­டைந்து கொண்டு செல்­கி­றது. இந்­த­நிலை நீடித்தால், அது, இலங்­கையில் உள்ள சிறு­பான்­மை­யி­னத்­த­வர்கள், மதத்­தினர் மட்­டு­மன்றி, பெரும்­பான்­மை­யின ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும் கூட ஆபத்தை எதிர்­கொள்ளும் நிலை ஏற்­படும்.
ஏனென்றால், அதன் இலக்கு பெளத்த மதத்தைப் பாது­காப்­பது என்ற பெயரில், பௌத்த, சிங்­கள ஆட்­சியை நிறு­வுவ ­தே­யாகும். அத்தகைய ஆட்சியில், கோ லோச்சப் போவது காவிகளே தவிர, அர சியல்வாதிகளல்ல.
-கபில்
http://www.tamilwin.com/show-RUmszATaKWnv5.html

Geen opmerkingen:

Een reactie posten