[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 08:08.51 AM GMT ]
இத்தாலி வாழ் இலங்கை மக்களை சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புனித பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வமாக அழைக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த இத்தாலிக்கு விஜயம் செய்துள்ளார்.
சில நாடுகள் இலங்கையில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய ஊக்கமளிப்பதே இந்த நாடுகளின் நோக்கமாகஅமைந்துள்ளது.
உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கை மக்கள் நாட்டுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது ஆட்சிக் காலத்திலேயே அதிகளவு தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நாடு எவ்வளவு ஜனநாயகத்தை உடையது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVew5.html
மன்னாரில் பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்ட சடலம் தோண்டி எடுப்பு
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 08:32.23 AM GMT ]
காலை 9 மணியளவில், மன்னார் மாவட்ட நீதிவான் செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில், சட்ட வைத்திய அதிகாரி, என்.ஜ.வி.இருசானா, மன்னார் மாவட்ட வைத்திய அத்தியட்சகர் வி.ரூபன் லெம்பேட், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரதனி அன்ரன் சிசில் ஆகியோரின் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
அண்மையில் வங்காலை மற்றும் சவுத்பார் கடற்கரையில் வெவ்வேறு தினங்களில் கரை ஒதுங்கிய இரு சடலங்களை அடையாளம் காண்பதற்காக இரு வாரங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்குமாறும் சடலம் அடையாளம் காணப்படாதவிடத்து அரச செலவில் அடக்கம் செய்யுமாறும் திடீர் மரண விசாரணை அதிகாரி தே.பி.சிந்தாத்துரை உத்தரவிட்டிருந்தார்.
கடந்த 3.9.2014 மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் அந்தச் சடலத்தை பிரோத பரிசோதனைக்குப் பின் 24.9.2014 அன்று அரச செலவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தச் சடலத்தை அடக்கம் செய்வதற்கு பதிலாக 15.9.2014 அன்று மீட்கப்பட்ட இரண்டாவது சடலம் பிரோத பரிசோதனை செய்யப்படாமல் அடக்கம் செய்யப்பட்டமை கடந்த 29.9.2014 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் 29.9.2014 அன்று இரண்டாவது சடலத்தை பிரேத பரிசோதனை செய்து அரச செலவில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அச்சடலம் அங்கு இல்லாதது தெரியவந்தது.
இந்த விடயம் மன்னார் நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை இன்று சனிக் கிழமை மீண்டும் தோண்டி எடுத்து பிரோத பரிசோதனை மேற்கொள்ளும் படி மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரடணம் கடந்த 2.10.2014 அன்று உத்தவிட்டிருந்தார்.
அவ்வுத்தரவின்படி, இன்று மன்னார் மாவட்ட நீதிவான் செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரோத பரிசோதனைக்காக மீண்டும் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszATYKVew6.html
Geen opmerkingen:
Een reactie posten