2008ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் மாதம் 16ஆம் திகதி, கொழும்பு புறக்கோட்டையில் WP ணா- 3656 என்ற இலக்கமுடைய பஸ் வண்டிக்கு குண்டு வைத்து அதில் பிரயாணம் செய்த பயணிகளை கொலை செய்வதற்கு எத்தனிதமை, அசையும் அசையா ஆதனமொன்றிற்கு இழப்பை ஏற்படுத்தி அதனை அழித்தவிடும் செயலை புரிந்ததாக அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.அவசரகால ஒழுங்கு விதிகளின் 25(1)ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தைப் புரிந்ததாக 13 தடயப்பொருட்களையும் 36 அரசசாட்சியங்களையும் உள்ளடக்கி சட்டமா அதிபரினால் இந்த வழக்கு 2013ஆம் ஆண்டு மார்கழி மாதம் 23ஆம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன் முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
http://www.athirvu.com/newsdetail/1143.html
Geen opmerkingen:
Een reactie posten