தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 oktober 2014

தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்தால் அதிமுக அரசை கலைப்பேன்: சுப்பிரமணிய சாமி!

ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: பல்டி அடித்த அரசு வழக்கறிஞர்… ஆச்சரியப்பட்ட சாமி (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 12:15.06 PM GMT +05:30 ]
ஜெயலலிதா வழக்கில் அரசு வழக்கறிஞர் நிபந்தனை ஜாமீன் வழங்கலாம் என்று கூறியது ஆச்சரியம் அளிக்கிறது என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
சுப்பிரமணிய சாமி இதுகுறித்து கூறியதாவது, கர்நாடக உயர்நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு உள்ள அறிவுரையாளர்கள் தவறாக அவரை வழி நடத்துகிறார்கள். ராம் ஜெத்மலானி போன்ற மூத்த வழக்கறிஞர் கூட எதற்காக, அவசரப்படுகிறார் என்பது தெரியவில்லை.
இது ஊழலுக்கு எதிரான ஒரு வழக்கு, மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை நான் எதிர்பார்த்தேன். ஆனால், அரசு வழக்கறிஞர் நிபந்தனை ஜாமீன் வழங்க தனக்கு ஆட்சேபனை இல்லை என்று பல்டி அடித்ததைதான் நான் எதிர்பார்க்கவில்லை.
அதுதான் எனக்கு ஆச்சரியம் அளித்தது என்று கூறியுள்ளார்.
http://www.newindianews.com/view.php?20c60YO2223KODfbceacmOJ74ce2M6AK0adc4cMQCdbdeHlAS2043p7mY4e04dA4oW23
தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்தால் அதிமுக அரசை கலைப்பேன்: சுப்பிரமணிய சாமி
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 07:18.02 AM GMT +05:30 ]
தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்தால் அதிமுக அரசை கலைக்க கோருவேன் என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜெயில், ஜாமீன் மறுப்பு போன்றவற்றால் தமிழகத்தில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள சுப்ரமணிய சாமி, அதிமுகவினர் சினிமாத்தனமாக போராடுகின்றனர்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். அவரும், தமிழக சட்டம் - ஒழுங்கை காப்பதில், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் அதிமுகவினர் பள்ளி, கல்லுாரிகளை மூடுவது, பேருந்துகளை ஓடவிடாமல் செய்து வருவது என்று தங்கள் சினிமாத்தனத்தை காட்டி வருகின்றனர்.
இது மறுபடியும் தொடர்ந்தால்,அதை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வேன். தமிழகத்தில் 356 சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, அ.தி.மு.க., அரசை கலைக்கக் கோருவேன்.
கவர்னர் ஆட்சி கொஞ்ச காலத்துக்கு இருக்கட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கலைப்பது என் எண்ணம் அல்ல. அதற்காக ஒரு அரசு, மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல், தொடர்ந்து ஒரு குற்றவாளியின் விடுதலைக்காக, வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டிருந்தால் அதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது.
எனக்கு தமிழக மக்களும், அவர்கள் நலனும்தான் முக்கியம். அதேபோல ஊழலால் இந்திய பொருளாதாரம் சுரண்டப்படுவதை எதிர்த்து போராடுவதும் தான் என் வாழ்நாள் கடமை.
அதை இறுதி வரையில் தொடர்ந்து செய்வேன், ஊழல்வாதிகள் யாரையும், எப்பவும் விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.
http://www.newindianews.com/view.php?20SAlRdbdSY063402cMQ3222Ym73adcfDOK40eM6AKaecWo4A4ce2JOm23

Geen opmerkingen:

Een reactie posten