தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 oktober 2014

மேற்கு லண்டனில் பொலிசார் பாரிய தேடுதல் வேட்டை: 4 இளைஞர்கள் கைது !

நேற்றைய தினம்(07) மேற்கு லண்டன் மற்றும் மத்திய லண்டன் பகுதியில் பாரிய தேடுதலில் ஈடுபட்ட பொலிசார், 4 இளைஞர்களைக் கைதுசெய்துள்ளார்கள் என அறியப்படுகிறது. 21 வயதாகும் 2 இளைஞர்களையும் மேலும் 20 வயதுடைய 2 இளைஞர்களையும் பொலிசார் சில நாட்களாக அவதானித்து வந்துள்ளார்கள். இவர்கள் நால்வரும் இணைந்து லண்டனில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டு இருந்ததாக பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள். இதனை தாம் முறியடித்துள்ளதாக ஸ்காட்லன் யாட் புலனாய்வுப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை கைதாகியுள்ள 4 இளைஞர்களில் ஒருவர், சிரியா சென்று பின்னர் அங்கிருந்து லண்டன் திரும்பியுள்ளார். இவர்களை நீண்ட நாட்களாக பொலிசார் அவதானித்தும் வந்துள்ளார்கள். இவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் வீடுகள் அனைத்தும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அத்தோடு கணணிகளும் சோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளது என ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக லண்டனில் இவர்கள் மேற்கொள்ள இருந்த பாரிய தாக்குதலை தாம் தடுத்துள்ளதாக கூறியுள்ள பொலிசார் அது என்ன தாக்குதல் என்பது பற்றி எதனையும் கூற மறுத்துவிடார்கள்.
பொலிசார் நேற்று மேற்கொண்ட பாரிய தேடுதல் காரணமாக சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1172.html

Geen opmerkingen:

Een reactie posten