தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

அடுத்த வெள்ளைக் கொடி சம்பவமா ?


முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்து முடிந்து, தற்போது பலாஸ்தீனத்திலும் தொடர ஆரம்பித்துள்ளது. பாலஸ்தீனம் வெளியிட்டுள்ள அதிரும் புகைப்படம் ஒன்று உலகை உலுப்பியுள்ளது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல் தலைவர்கள் நிராயுதபாணிகளாக சரணடையச் சென்றாவேளை அவர்களை, இலங்கை இராணுவம் எவ்வாறு ஈவுஇரக்கம் இன்றி கொலைசெய்ததோ அதனை ஒத்த படங்களையே பாலஸ்தீனம் தற்போது வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன விடுதலை அமைப்புகளில் ஒன்றான "ஹமாஸ் அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர், இஸ்ரேல் பகுதிகள் மீது சில ராக்கெட்டுகளை ஏவியது. இதனால் இஸ்ரேல் பகுதியில் 2 வர் உயிரிழந்தார்கள். இதற்கு பழிவாங்கவென தற்போது இஸ்ரேல் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கொன்று குவித்துள்ளது.
நேற்றைய தினம் காசா பகுதியில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டு மழைபொழிந்துள்ளது. இதில் தனது குடும்பம் காணமல் போனதை உணர்ந்த இளைஞர் ஒருவர் மோபைல் போனை கையில் எடுத்துக்கொண்டு, தனது குடும்ப அங்கத்தவர்களுக்கு போன் அடித்தவாறு அவர்களை வீதியெங்கும் தேடி அலைந்துள்ளார். இதேவேளை காசா பகுதிக்குள் தற்போது இஸ்ரேலின் அதிரடிப்படையினர் ஊடுருவியுள்ளார்கள். அவர்கள் இந்த நிராயுதபாணியான இளைஞரை குறிசுடும்(ஸ்னைப்பர்) துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். காயமடைந்து நிலத்தில் வீழ்ந்த இந்த இளைஞரை மீண்டும் மீண்டும் சுட்டு அவரை அப்படியே கொலைசெய்துள்ளார்கள். அதாவது குறி சுடும் துப்பாக்கியை வைத்திருந்த படையினருக்கு இந்த இளைஞர் நிராயுதபாணியாக இருப்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.
இருப்பினும் அவர்கள் இவரை தாக்கியுள்ளார்கள் என்றால் அது கொலைசெய்யும் நோக்குடன் தான் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது. கொல்லப்பட்ட இளைஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பாலஸ்தீனம் இன்று வெளியிட்டுள்ளது. அது உலக நாடுகளிடம் நீதி கேட்டு இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். பாலஸ்தீனம் ஒரு காலத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மிகவும் துணை போன நாடாகும். அன் நாடு ஈழ விடுதலை போராட்ட வீரரான உமா மகேஸ்வரன் மற்றும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலரை செங்கம்பளம் கொண்டு வரவேற்று பல உதவிகளை புரிந்துள்ளது. ஆனால் இன்று அவர்கள் நிலையும் ஈழத் தமிழர்கள் போல ஆகியுள்ளது என்பது தான் பெரும் கவலைக்கு உரிய விடையம் ஆகும்.




Geen opmerkingen:

Een reactie posten