பிரித்தானியா இலங்கை அரசுக்கு கொடுக்கும் அடி: இலங்கையின் பொறிமுறை தோல்வியடைந்துள்ளது !
[ Jul 04, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 14300 ]
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் முழு அளவில் அமுல்படுத்தப்படவில்லை எனவும், பகுதியளவிலேயே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன பக்கச்சார்பற்ற விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நடத்தத் தவறியுள்ளது என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கான அரசியல் விருப்பம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டிலிருந்து பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் சர்வதே சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/354.htmlலண்டன் தீ விபத்தில் இறந்துபோன தமிழர் பெண் இவர் தான் (புகைப்படம் இணைப்பு)
[ Jul 04, 2014 11:58:51 AM | வாசித்தோர் : 27220 ]
பெண்ணின் கணவரான 58வயதுடைய ஜெயகுமார் தில்லையம்பலம் என்பவர் வீட்டில் இருந்து வெளிப்புறமாக பாய்ந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களின் மகள் ஷஷ ஜெயகுமார்(23) விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்த நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது. இவர் நேற்று நாடு திரும்பியுள்ளார். குறித்த பெண் கொழும்பில் வசித்து வந்த நிலையில், பின்னர் அவர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார் என்றும் மேலும் அறியப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/357.htmlலண்டனில் உள்ள 8 பேருக்கு எதிராக இலங்கையில் கிரிமினல் வழக்கு: லேட்டஸ்ட் தகவல் !
[ Jul 04, 2014 12:30:28 PM | வாசித்தோர் : 16585 ]
வெளிநாடுகளில் உள்ள தமிழ் செயல்பாட்டாளர்களை வரும் செப்ட்டெம்பர் மாதத்திற்கு முன்னதாக, முடக்க வேண்டும் என்று இலங்கை அரசு கங்கணம் கட்டி வருகிறது. அடுத்த ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னர் சில தமிழர்களை அப்படியே லண்டனில் முடக்கவேண்டும் என்று சிங்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்தே சிங்கள புலனய்வு இவ்வாறு இவர்கள் மீது வழக்குகளை தொடுத்துள்ளது. குறித்த 8 பேரும் இலங்கைல் இல்லாத நிலையில் இந்த வழக்கை நடத்தி முடித்து, தீர்ப்பை வெளியிட கொழும்பு நீதிமன்றம் தயாராகி வருகிறது. இது தொடர்பான மேலதிக செய்திகள் விரைவில் அதிர்வு இணையத்தில் வெளியாக உள்ளது. எனவே அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.
http://www.athirvu.com/newsdetail/359.html
Geen opmerkingen:
Een reactie posten