தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 november 2014

மலையக அரசியல்வாதிகளின் கபட நாடகம் அம்பலம்?



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2005ம் ஆண்டு தேர்தலின்போது 50 ஆயிரம் வீடுகள் மலையக மக்களுக்கு அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அதுதவிர, மீண்டும் இம்முறை மலையக மக்களுக்கு 50ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்து வாக்குறுதிகள் இனியாவது நிறைவேற்றப்படுமா என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள், லங்காசிறி வானொலியில்  இடம்பெற்ற சிறப்புக் கருத்துக்களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும், கொஸ்லாந்த, மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை கொடுக்க விடாது அதிகாரிகள் தடுப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நிவாரணப் பொருட்கள் போதும் என்று சொல்லுமளவிற்கு கொடுக்கவில்லை. தற்போது இருக்கும் இடமும் சரியாக செய்து தரவில்லை. நிவாரணம் அறவே கிடைக்கவில்லை என்று சொல்லவில்லை.
அரச அதிகாரிகள் மற்றும் ஏனையவர்களிடமிருந்து வரும் சாமான்கள் எங்கு போகின்றது என தெரியாது.
எல்லாம் கொண்டுவந்து கொடுத்துவிட்டோம் என்று கூறுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுத்த பொருட்கள் எங்கு இருக்கின்றன என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மண்சரிவில் பாதிக்கப்பட்ட இடங்கள் முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களுக்கு எங்களையும் செல்ல விடுவதில்லை. அவர்களும் போவதாகத் தெரியவில்லை.
இரவிரவாகப் போகிறார்கள், வருகிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
தமிழ் அரசியல்வாதிகள் எங்களைப் பார்வையிட வந்தால் அவர்களுடன் பேச விடுவதில்லை. ஏனைய அரசியல்வாதிகள் இப்பிரதேசங்களுக்கு பொலிஸ், இராணுவத்துடன் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர்
என பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgo2.html

Geen opmerkingen:

Een reactie posten