[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 12:16.40 PM GMT ]
முன்னதாக நிலச்சரிவுக்குள்ளான பகுதிகளைப் பார்வையிட்ட இந்தக் குழுவினர், கொஸ்லாந்தை ஸ்ரீ கணேசா மகா வித்தியாலயத்திலும், பூனாகலை இல:01 மற்றும் இல:02 பாடசாலைகளிலும் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டனர்.
அங்கு நிலவரங்களை ஆராய்ந்ததோடு வேறு சில இடங்களுக்கும் விஜயம் செய்தனர்.
இந்த குழுவில் தாவரவியல் பூங்காக்கள் பொதுப் பொழுதுபோக்கு பிரதி அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஸ்ணன், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஈ.சரவணபவன், பொன்.செல்வராசா, சி.சிறீதரன், அரியநேத்திரன், யோகேஸ்வரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும்,
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர் சண்முகவரதன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்.சி.பாஸ்கரா, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.இராஜதுரை, ஜனாதிபதியின் இணைப்புப் பணிப்பாளரும், மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளருமான அ.அரவிந்தகுமார் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXiq2.html
மீரியபெத்த தோட்டப் பாதை கண்டுபிடிப்பு- மண்ணில் புதைந்த மற்றுமொரு சடலம் மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 12:51.04 PM GMT ]
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மீரியபெத்த பகுதியில் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி மண்ணினால் மூடப்பட்டிருந்த மீரியபெத்த தோட்டத்திற்கு பயணிக்கும் பாதையை கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மண் சரிவு இடம்பெற்ற இடத்திலிருந்து மற்றுமொரு சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
தற்பொழுதுவரை மண்சரிவுக்குள் அகப்பட்ட மொத்தம் 6 பேருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று மீட்கப்பட்டுள்ள சடலத்தை அடையாளம் காண்பதற்காக பிரதேச வாசிகளின் உதவிகள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சரிந்து விழுந்த மலையின் மண் வீடுகளுக்கு மேலால் 25 அடிகள் மூடப்பட்டுள்ளது. இதன்கீழ் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மண் சரிவு ஏற்பட்ட இடத்தினைப் பார்வையிடுவதற்கு அதிகளவான மக்கள் வாகனங்களில் செல்வதாகவும் அந்த வாகனங்களை மீண்டும் திருப்பியனுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அங்கு செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்துவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXiq4.html
Geen opmerkingen:
Een reactie posten