தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

ராஜினாமா கடிதத்தை கையளித்த கிறிஸ் நோனிஸ்!

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கலாநிதி கிறிஸ் நோனிஸ் தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
லண்டனில் இருந்து கொழும்பு செய்தி ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார். தான் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் நோனிஸ், அமெரிக்காவில் வைத்து வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்தனவினால் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
ராஜதந்திர சேவையில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை அரசியல்வாதி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
கிறிஸ் நோனிஸ் அடி வாங்கியிருந்தால் நண்பர்கள் என்ற வகையில் அதனை தீர்த்து கொள்ள வேண்டும்: யாப்பா
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் மீது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அவர்கள் நண்பர்கள் என்ற வகையில் தீர்த்து கொள்ள வேண்டும் என அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்ப தெரிவித்துள்ளார்.
பன்னல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போது அவர் இதனை கூறியுள்ளார்.
எனினும், லண்டனில் இருந்து இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ், தான் உயர்ஸ்தானிகர் பதவியில் இருந்து விலகும் ராஜினாமா கடிதத்தை வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
தன் மீது தாக்குதல் நடத்தியதாக கிறிஸ் நோனிஸ் கூறியிருந்தார்.
மருத்துவரான பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து பேசுவதற்காக ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஒருவர் லண்டன் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
தன்னை தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காது போனால், தான் தொடர்ந்தும் உயர்ஸ்தானிகராக பணியாற்ற போவதில்லை என கிறிஸ் நோனிஸ் குறிப்பிட்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeq3.html

Geen opmerkingen:

Een reactie posten